விவசாயிகள் போராட்டம்- பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்
டெல்லி: விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் நிலையில் பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 49 நாட்களாக பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே விவசாய சட்டங்கள் தொடர்பான வழக்குகள் மீது உச்சநீதிமன்றத்தில் 2-வது நாளாக இன்று விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணையின் முடிவில் மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களை செயல்படுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான பெஞ்ச் இடைக்கால தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மறு உத்தரவு வரும் வரை இந்த இடைக்கால தடை தொடரும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

மேலும் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக 4 பேர் கொண்ட வல்லுநர் குழுவையும் உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.
இக்குழுவில்,
1) விவசாயிகள் சங்க தலைவர் புபீந்தர்சிங் மான்
2) இண்டர்நேஷனல் பாலிசி அமைப்பின் தலைவர் டாக்டர் பிரமோத் குமார் ஜோஷி
3) விவசாய பொருளாதார வல்லுநர் அசோக் குலாதி
4) மகாராஷ்டிரா சிவ்கேரி சங்கத்னாவின் அனில் தன்வாட்
ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
முன்னதாக இந்த குழுவின் முன்னர் ஆஜராகப் போவதில்லை என விவசாய சங்க தலைவர்கள் தெரிவித்தனர். இது உச்சநீதிமன்றத்திலும் தெரிவிக்கப்பட்டது. விவசாய சங்க தலைவர்கள் நேரில் வராவிட்டாலும் அவர்கள் வழக்கறிஞர்கள் கருத்தை முன்வைக்கலாம் என தலைமை நீதிபதி போப்டே கூறினார்.
இந்த குழுவுக்கான வரையறைகளையும் உச்சநீதிமன்றம் வகுக்க வேண்டும்; இந்த குழு தொடர்பான பொதுமக்களுக்கு விளம்பரப்படுத்த வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான திமுக எம்பி திருச்சி சிவாவின் வழக்கறிஞரான வில்சன் எம்.பி. வலியுறுத்தினார்.
-
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக?












Click it and Unblock the Notifications