டெல்லியில் மீண்டும் மையம் கொள்ளும் விவசாயிகள் போராட்டம்- நொய்டாவில் இருந்து 'டெல்லி சலோ' பேரணி!
டெல்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் இன்று முதல் மீண்டும் விவசாயிகள் போராட்டத்தை நடத்த உள்ளனர். இதற்காக நொய்டா எல்லையில் இருந்து டெல்லி நோக்கி பாதயாத்திரையாக செல்கின்றனர் விவசாயிகள். டெல்லியில் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை அறிவித்துள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியிலேயே முகாமிட்டு விவசாயிகள் இந்தப் போராட்டத்தை தீவிரப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
மத்திய பாஜக அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை ஓராண்டு டெல்லி எல்லைகளில் முகாமிட்டு விவசாயிகள் உக்கிரப் போராட்டம் நடத்தினர். பஞ்சாப், ஹரியானா, உ.பி. உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். இப்போராட்டத்தில் பங்கேற்ற 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர்.

உலகின் கவனம் ஈர்த்தது இந்த விவசாயிகள் போராட்டம். இதனையடுத்து மத்திய பாஜக அரசு தமது 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றது. பிரதமர் மோடியும் இந்த சட்டங்களைக் கொண்டு வந்ததால் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் போது விவசாய சங்கத்தினருடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தையில் வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க வகை செய்யும் சட்டம் கொண்டு வருதல் உள்ளிட்ட வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு அளித்தது.
ஆனால் மத்திய பாஜக அரசு தங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கூறி கடந்த பிப்ரவரி மாதம் முதல் பஞ்சாப்- ஹரியானா எல்லையான சம்புவில் முகாமிட்டு விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் அடுத்த கட்டமாக நொய்டாவில் இருந்து டெல்லி நோக்கி இன்று விவசாயிகள் அணிவகுத்து செல்ல இருக்கின்றனர். டெல்லியில் முகாமிட்டு தங்களுக்கு மத்திய பாஜக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி போராட்டம் நடத்தவும் விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதனால் டெல்லி மீண்டும் பரபரப்புக்குள்ளாகி இருக்கிறது. மேலும் நொய்டாவில் விவசாயிகள் அணிவகுப்பைத் தடுக்கும் வகையில் போலீசார் தடுப்புகளை அமைத்துள்ளனர். அப்பகுதியில் போக்குவரத்திலும் மாற்றங்களை அறிவித்துள்ளது போலீஸ். இதனால் நொய்டா- டெல்லி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications