பொருளாதாரத்தை உயர்த்த ஆண்டுதோறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு.. பட்ஜெட்டில் அறிவிப்பு
டெல்லி: அந்நிய முதலீடுகளை ஈர்க்க ஆண்டுதோறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பல்வேறு பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் இன்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்.
பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய மத்திய அமைச்சர் அந்நிய நேரடி முதலீடு இந்தியாவுக்கு அவசியமான ஒன்று. தேசிய முதலீட்டு மற்றும் உள்கட்டமைப்பு நிதியம் உதவியுடன், அந்நிய முதலீடுகளை ஊக்குவிக்க ஆண்டுதோறும் நம் நாட்டில் இனி உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என அறிவித்தார்,

2018 மற்றும் 2019க்கு இடையில் இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டு வரத்து 6% அதிகரித்து ரூ. 4.4 லட்சம் கோடியாக உள்ளது
துறைமுகம், விமான நிலையங்கள், நெடுஞ்சாலைத் துறை ஆகியவற்றின் வளர்ச்சிக்கு வெளிநாடு முதலீடு அவசியம் என்று நிதியமைச்சர் தெரிவித்தார். எனவே முன்னணி தொழில் நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்றார்
காப்பீட்டு துறை, ஊடகம் மற்றும் விமான போக்குவரத்து துறை உள்ளிட்டவற்றில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கவும் முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். இதில் ஊடகதுறையில் அனிமேஷன், விஷுவல் எபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் எனப்படும் ஏவிஜிசி துறை சார்ந்த காப்பீடு ஆகிவற்றில் அந்நிய நேரடி முதலீட்டின் விதிமுறைகளை தளர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஊடகத்துறையை பொருத்த வரை நாளிதழ்கள், வார இதழ்கள் உள்ளிட்டவைகளுக்கு 26% நேரடி அந்நிய முதலீட்டுக்கு அனுமதிக்கப்படும். அரசின் அனுமதியுடன் செய்திகள் மற்றும் நடப்பு விவகாரங்களை பிரசுரித்து கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.
அதே போல வெளிநாட்டு ஏடுகளின் இந்திய பதிப்புகளும் தொடங்க அனுமதி அளிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளி துறையில் வணிக ரீதியாக செயல்பட்டு வருகிறது இஸ்ரோ. எனினும் விண்வெளித்துறையில் அந்நிய முதலீடுகளை ஈர்க்க, இஸ்ரோவின் வணிக நிறுவனமாக என்.எஸ்.ஐ.எல் என்ற புதிய நிறுவனம் தொடங்கப்படும் என்றார்.
நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான முயற்சியாக, மேற்கண்ட துறைகளில் நேரடி அந்நிய முதலீட்டு விதிகளை மேலும் தளர்த்த அரசு தயாராகி வருவதாக குறிப்பிட்டார். மேற்கண்ட அறிவிப்புகள் சர்வதேச முதலீட்டாளர்களை நம் நாட்டின் பக்கம் ஈர்க்கும் என்று மத்திய நிதியமைச்சர் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications