உற்பத்தி துறை, சில்லரை விற்பனையில் அன்னிய நேரடி முதலீடு விதிமுறை தளர்வு.. மத்திய அரசு அதிரடி முடிவு
டெல்லி: மந்தமான பொருளாதாரத்தை வேகம்பிடிக்க செய்வதற்காக, ஒற்றை பிராண்ட் சில்லறை விற்பனை, டிஜிட்டல் மீடியா மற்றும் உற்பத்தி உள்ளிட்ட பல துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டிற்கான விதிமுறைகளை தளர்த்த நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் நாடு மிக அதிக அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இன்றைய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறைகள் தாராளமயமாக்கப்பட்டு எளிமைப்படுத்தப்பட்டுள்ளன, இது வேலைவாய்ப்பை அதிகரிக்கும்.
இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான வாய்ப்பை நாங்கள் கண்டு வருகிறோம். சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை தளர்த்தியுள்ளதால், நிறுவனங்கள் இப்போது ஒரு செங்கல்லை எடுத்து வைக்கும் முன்பாகவே, ஆன்லைன் சில்லறை விற்பனையைத் தொடங்க முடியும்.
ஒற்றை பிராண்ட் சில்லறை விற்பனையைப் பொறுத்தவரை, இந்தியாவில் இருந்து 30 சதவீத உள்ளூர் முதலீடு அதில் இருக்க வேண்டும் என்று ஒரு விதிமுறை இருந்தது. அது இப்போது நீக்கப்பட்டுள்ளது. இது நிறுவனங்களின் செயல்பாடுகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்லைன் விற்பனை தளவாடங்கள், டிஜிட்டல் கொடுப்பனவுகள், வாடிக்கையாளர் பராமரிப்பு, பயிற்சி மற்றும் தயாரிப்பு திறன் ஆகியவற்றில் வேலைகளை உருவாக்க வழிவகுக்கும்
நிலக்கரி விற்பனைக்கு, நிலக்கரி சுரங்கத்திற்கும் அதனுடன் தொடர்புடைய செயலாக்க உள்கட்டமைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கும், தானியங்கி வழியில் 100% அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது, இது சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் மீடியா துறையில் 26% அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அச்சு ஊடகத் துறையில் ஏற்கனவே 26% அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. கன்டன்ட் சேவைகளை வழங்கும் டிஜிட்டல் மீடியாக்களில் 49% அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டிருந்தது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications