Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லியில் மத்திய அரசு அலுவலகங்கள் உள்ள சாஸ்திரி பவனில் திடீர் தீ விபத்து.. டெல்லியில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைநகர் டெல்லியில் மத்திய அரசு அலுவலகங்கள் செயல்படும் சாஸ்திரி பவனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன.

புது டெல்லியில் மத்திய அரசின் அலுவலகங்கள் அனைத்தும் அங்குள்ள சாஸ்திரி பவனில் செயல்பட்டு வருகின்றன.

Fire broke out at New Delhi Shastri Bhawan on Tuesday afternoon

இந்த அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான மத்திய அரசின் பல்வேறு துறை ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். மேலும் பல துறைகளின் முக்கிய ஆவணங்களும் சாஸ்திரி பவனில் தான் இருக்கின்றன. இந்நிலையில் இன்று பிற்பகல் வழக்கம் போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த சாஸ்திரி பவனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து உடனடியாக தகவல் அறிந்து 7 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தால் எந்த மாதிரியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது, யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

மத்திய அரசின் அலுவலகங்கள் நிறைந்த சாஸ்த்ரி பவனில் தீ பிடித்து எரிவதால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+