இன்று மத்திய பட்ஜெட் 2021 தாக்கல்: முதல்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் நடைமுறை
டெல்லி: 2021 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டிஜிட்டல் முறையில் இன்று தாக்கல் செய்கிறார்.
Recommended Video
கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. கொரோனா ஊரடங்கால் தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உள்கட்டுமான திட்டங்கள் முற்றிலும் முடங்கியது.

இது போல் அனைத்து துறையினரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் கொரோனாவுக்கு மத்தியில் இன்று காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. குறிப்பாக சுகாதாரத் துறைக்கு ஏதேனும் சலுகைகள், ஒதுக்கீடுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அது போல் வெளிநாட்டு முதலீடுகளை கவரும் வகையிலான அறிவிப்புகளும் எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டால் நிதியாண்டு தொடக்கமான ஏப்ரல் மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு தொடங்கும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் முதல்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் ஆவண நடைமுறை அமலுக்கு வருகிறது. மக்கள் பிரதிநிதிகள் பட்ஜெட் அறிக்கையை மடிக்கணினி உள்ளிட்டவற்றில் பதிவிறக்கம் செய்து பார்க்கும்வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்துவிட்டதால் வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பு இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சிறு, குறு தொழில்கள் மற்றும் வேளாண்துறைக்கு சலுகைகள் அளிக்கப்படுவது தொடர்பான அறிவிப்பு இடம்பெறக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications