ரயில்வேக்கு ரூ.1.15 லட்சம் கோடி.. உருவாகிறது தேசிய ரயில் திட்டம்..நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு
டெல்லி: ரயில்வே துறையின் உள்கட்டமைப்பு வசதிக்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-2022 நிதியாண்டில் 1.15 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார். அதேநேரம் விமான நிலையங்களை தனியார் மயம் ஆக்குவதற்கு இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.
100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பட்ஜெட் 2021-22 இருக்கும் என்று கூறி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதிகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவரித்து வருகிறார்.,

பட்ஜெட்டில் மிக முக்கியமான ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதிகுறித்து நிர்மலா சீதாராமன் கூறுகையில், இந்த நிதியாண்டில் ரயில்வே துறைக்கு 1.15 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது. இந்திய தேசிய ரயில் திட்டம் 2030 தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் பல்வேறு புதிய ரயில் பாதைகள் அமைப்பது, சிறப்பு சரக்கு வழித்தடங்களை உருவாக்குவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். அகல ரயில்பாதை வழித்தடங்கள் 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 100% மின்மயமாக்கப்படும்
ரயில்வே துறையில் சிறப்பு வழித்தடங்கள் உருவாக்கப்படும் என்றும் சரக்கு ரயில் போக்குவரத்திற்கு தனிப் பாதை உருவாக்கி வருவாயை பெருக்கத் திட்டம் உள்ளதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்,
சென்னை, திருவனந்தபுரம், டெல்லி, ஹைதராபாத், மும்பை போன்ற பெருநகரங்களில் மட்டுமே விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்பட்டு வந்தது. ,இனி 2ம் கட்ட, 3ம் கட்ட நகரங்களில் உள்ள விமான நிலையங்களும் தனியார் மயம் ஆக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications