எதிர்க்கட்சிகள் பலமாக இருந்தால்... நாங்கள் ஏன் போராட போகிறோம்... கொந்தளிக்கும் விவசாயிகள்
டெல்லி: நாட்டில் தற்போது எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருப்பதாலேயே விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளதாக விவசாயச் சங்கத் தலைவர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கடந்தாண்டு அக்டோபர் மாதம் மூன்று புதிய விவசாய சட்டங்களை அறிமுகப்படுத்தியது. இச்சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்கு எதிராகவுள்ளதாகக் கூறி பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாகப் போராடி வருகின்றனர்.
விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறுவது தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயச் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே ஒன்பது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளன. இருப்பினும், இதில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.

பலவீனமான எதிர்க்கட்சி
தொடர்ந்து போராடி வருவது குறித்து விவசாயச் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் கூறுகையில்,"நம் நாட்டில் எதிர்க்கட்சிகள் தற்போது பலவீனமாக உள்ளன. எனவே விவசாயிகள் போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். விவசாயிகளின் இந்தப் போராட்டம் ஒரு கருத்தியல் புரட்சி. இது ஒருபோதும் தோல்வியடையாது.

ஏன் ரத்து செய்யவில்லை
தலைநகர் டெல்லியில் முகாமிட்டுள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இருப்பினும், அரசு விவசாய சட்டங்களை ரத்து செய்ய முன் வரவில்லை? இதனால் எங்கள் போராட்டம் தொடரும் என்றே நினைக்கிறேன். விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை விவசாயிகள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப மாட்டார்கள்" என்றார்.

சம்மதிக்கக் கூடாது
முன்னதாக விவசாய சட்டங்கள் குறித்து சட்டப்பிரிவு வாரியாக விவாதிக்க வேண்டும் என்று விவசாய பிரதிநிதிகளுக்கு வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கோரிக்கை விடுத்திருந்தார். இதுபோன்ற ஆலோசனைக்கு விவசாயிகள் சம்மதம் தெரிவிக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறுவது மட்டுமே போராட்டத்தை நிறுத்த ஒரே வழி என்றும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்தகட்ட பேச்சுவார்த்தை
தலைநகரில் தற்போது கடும் குளிர் நிலவுகிறது. இருப்பினும், அதை எல்லாம் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாய சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி இதுவரை மூன்று விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில். மத்திய அரசுக்கும் விவசாயச் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையேயான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறவுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications