எம்பி “செக்ஸ்” டார்ச்சர்.. பாஜக மீது பாய்ந்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் - ஆவேச பேச்சு! இவரா?
டெல்லி: மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராடி வரும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி கருத்து தெரிவித்து உள்ளார்.
பாஜகவை சேர்ந்தவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் உத்தரப் பிரதேசத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். அதுமட்டுமின்றி இந்திய மல்யுத்த சம்மேளனமான WFI யின் தலைவராக மூன்றாவது முறையாக பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில்தான் பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த பயிற்சி பெற்று வரும் இளம் வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களான பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் உள்ளிட்டோர் போராட்டத்தில் குதித்தனர். அப்போதே இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாஜக எம்பி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க இவர்கள் வலியுறுத்திய நிலையில், இது குறித்து மேரி கோம் தலைமையில் விசாரணை குழு ஒன்றை மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் அமைத்தது. தொடக்கத்தில் இந்த குழு மீது வீரர்கள் நம்பிக்கை வைத்து போராட்டத்தை நிறுத்திய நிலையில், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த ஒரு வாரத்துக்கு முன் மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தரில் வீரர்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.
இந்த நிலையில் இந்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேற்கு வங்க மாநில விளையாட்டுத் துறை அமைச்சருமான மனோஜ் திவாரி ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். "இந்தியாவின் அரசியல் கலாச்சாரத்தை அழித்து வருகிறோம் என்று பாஜக அரசு மீண்டும் நிரூபித்துக் கொண்டு இருக்கிறது.
பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் பலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்திருக்கும் புகார்கள் அவமானகரமானவை. விளையாட்டு வீரர்களின் எதிர்காலம் கருதி புதிய பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்கள். இது இந்தியாவின் பெருமையாக விளங்கும் பெண்களை பாதுகாக்கும் விசயம்.

இந்தியாவின் மூத்த மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக் மற்றும் பலர் இந்திய மல்யுத்த சம்மேளனத்தையும், பிரிஜ் பூஷன் சரண் சிங்கையும் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்துகொண்டு இருக்கிறார்கள். கடந்த முறை போராட்டம் நடத்தியபோது அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என மல்யுத்த வீரர்கள் தெரிவிக்கின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபாதையில் இரவு முழுவதும் படுத்துக் கிடக்கின்றனர்.
It bleeds me when I see the brightest athletes of our country 🇮🇳 pleads justice on the streets. They all are the pride of our nation and we all should come forward to fight together in this. Jai Hind! We want justice… ✊🇮🇳🤼♀️#WrestlersProtest | #JantarMantar |… pic.twitter.com/EuRCd5wOgM
— MANOJ TIWARY (@tiwarymanoj) April 28, 2023
ஒட்டுமொத்த நாடும் இணைந்து நெருக்கடியான சூழலில் இருந்து வரும் நமது பெண்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று ஒரு விளையாட்டு வீரனாக நான் கேட்டுக்கொள்கிறேன். இது தற்போது தேசிய பிரச்சனையாகிவிட்டது. நமது பெண்களின் பாதுகாப்புதான் முதன்மையாக இருக்க வேண்டும். பாஜக அரசாங்கம் எப்படி நமது நாட்டில் நிலவும் அனைத்து வகையான ஏற்றத்தாழ்வு கையாள்கிறது என்பதை இந்த விசயம் எடுத்துக்காட்டுகிறது. வெட்கம்." என்று தெரிவித்து இருக்கிறார்.
மேற்கு வங்கத்தை சேர்ந்த மனோஜ் திவாரி இந்திய அணிக்காக 12 ஒருநாள், 3 டி20 போட்டிகளிலும், ஐபிஎலில் டெல்லி, கொல்கத்தா, புனே, பஞ்சாப் ஆகிய அணிகளுக்காக மொத்தம் 95 போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications