Satya Pal Malik demise: காஷ்மீர் மாஜி ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!
டெல்லி: முன்னாள் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் (79) காலமானார். நீண்ட காலமாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சத்யபால் மாலிக், டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே சிகிச்சை பலனில்லாமல் அவர் இன்று மதியம் 1 மணியளவில் காலமானார்.
முன்னாள் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் (79), நீண்டகாலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று பிற்பகல் 1 மணியளவில் உயிரிழந்தார்.

ஆகஸ்ட் 2018 முதல் அக்டோபர் 2019 வரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கடைசி ஆளுநராக இருந்தவர் சத்யபால் மாலிக். அவரது பதவிக்காலத்தில்தான், 2019 ஆகஸ்ட் 5ம் தேதி, அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவு நீக்கப்பட்டு, காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. மேலும், காஷ்மீர் மாநிலம் காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டன. இன்று இந்த முடிவின் ஆறாவது ஆண்டு நிறைவு தினமாகும்.
ஜம்மு காஷ்மீரைத் தொடர்ந்து, அவர் கோவாவின் 18வது ஆளுநராகவும், பின்னர் அக்டோபர் 2022 வரை மேகாலயாவின் 21வது ஆளுநராகவும் பதவி வகித்தார். இருப்பினும், அதன் பிறகு உடல்நிலை பாதிப்புகளால் பொது வாழ்க்கையில் இருந்து விலகி இருந்தார். இந்தச் சூழலில் தான் அவர் இன்று காலமானார்.












Click it and Unblock the Notifications