டெல்லியில் தொடங்கியது ஜி20 மாநாடு.. உக்ரைன்- ரஷ்யா போர் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறதா?
டெல்லி: டெல்லியில் 18ஆவது ஜி20 உச்சி மாநாடு கோலாகலமாக தொடங்கியது. இந்த மாநாடு நடைபெறும் இடத்திற்கு வந்த உலகத் தலைவர்களை பிரதமர் மோடி வரவேற்றார்.
உலக நாடுகள் தங்களுக்குள் ஒருங்கிணைந்து பல்வேறு விஷயங்களை செயல்படுத்துவதற்காக பிரிக்ஸ், சார்க், ஆசியான் போன்ற அமைப்புகளை உருவாக்கியுள்ளன. இதன் மாநாடுகள் குறிப்பிட்ட காலகட்டத்தில் நடக்கும்த இதில் அந்தந்த அமைப்புகளுன் உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள்.

அந்த வகையில் ஜி20 என்ற அமைப்பு சக்தி வாய்ந்த அமைப்பாக உள்ளது. இதில் 20 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இங்கு இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென்கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரேசில், கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய 20 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன.
சர்வதேச பொருளாதாரத்தின் சிக்கல்களை வளர்ந்த நாடுகளும் வளரும் நாடுகளும் கலந்து பேசுவது குறித்து ஆலோசனை நடத்தப்படும். இந்த மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. உறுப்பு நாடுகளின் அகர வரிசையின் படி ஜி20 மாநாடு அந்தந்த நாடுகளில் நடத்தப்படும். கடந்த ஆண்டு இந்தோனேஷியாவில் நடத்தப்பட்டது.
இந்த ஆண்டு இந்தியாவில் ஜி20 மாநாடு நடத்தப்படுகிறது. டெல்லியில் இன்று தொடங்கிய இந்த ஜி20 மாநாட்டின் முழக்கம் என்னவெனில் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதுதான். ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம் நாடு முழுவதும் 9 மாதங்களாக நடந்தது. சென்னை உள்பட 60 நகரங்களில் 200 கூட்டங்கள் நடத்தப்பட்டன.
டெல்லியில் ஜி20 உச்சி மாநாட்டுக்காக மத்திய அரசு பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்துள்ளது. டெல்லியில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில்தான் ஜி20 மாநாட்டு கூட்டங்கள் நடக்கின்றன. இதில் ஜி 20 அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
அந்த வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், வங்கதேச பிரதமர ஷேக் ஹசீனா உள்ளிட்டோர் டெல்லிக்கு நேற்றே வந்துவிட்டனர். ஒவ்வொரு வெளிநாட்டு தலைவர்களையும் மத்திய அமைச்சர்கள் வரவேற்று அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஹோட்டல்களுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடின் பங்கேற்கவில்லை, அவருக்கு பதிலாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் பங்கேற்கிறார். அது போல் சீன அதிபர் ஜின்பிங் ஜி20 மாநாட்டில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளதாக தெரிகிறது. அவருக்கு பதிலாக சீன பிரதமர் லி கியாங் கலந்து கொள்கிறார்.
ஜி20 நாடுகளின் தலைவர்கள் மட்டுமல்லாமல் சில நாட்டு தலைவர்களை சிறப்பு அழைப்பாளர்களாக மத்திய அரசு அழைத்திருந்தது. அந்த வகையில் ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ்ஸுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது டெல்லி வருகை கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது.
உலகத் தலைவர்கள் ஒரே இடத்தில் குவிவதாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. டெல்லியில் மருந்து சேவை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து போக்குவரத்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பருவநிலை மாற்றம், எரிசக்தி மாற்றம் , பொருளாதார வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. கொரோனாவுக்கு பிறகு நடைபெறும் முக்கிய சர்வதேச மாநாடாக இது விளங்குகிறது.
ஜி20 மாநாடு நடைபெறும் பிரகதி மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். அவரை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் வரவேற்று அழைத்து சென்றார். பிரதமர் அங்குள்ள ஏற்பாடுகளையும் ஆய்வு செய்தார். 18 ஆவது ஜி20 உச்சி மாநாடு கோலாகலமாக தொடங்கியது. இதற்காக பாரத் மண்டபத்திற்கு தலைவர்கள் வந்தனர். சிகப்பு கம்பள விரிப்பில் வந்த அவர்களை பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார். பின்னர் ஒடிஸாவின் கோனார்க் சக்கரம் பின்னணியில் இருக்கும்படி அமைக்கப்பட்ட அரங்கின் முன்பு நின்று உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த மாநாட்டில் உக்ரைன்- ரஷ்யா போர் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications