காங். பொதுச் செயலாளர் பதவியில் இருந்து 'கலகக் குரல்' குலாம்நபி ஆசாத் விடுவிப்பு
டெல்லி: காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் தலைமைக்கு எதிராக குரல் எழுப்பிய மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்தின் பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
சோனியா காந்தி தலைமைக்கு எதிராக மூத்த தலைவர்கள் 23 பேரை அணிதிரட்டி கடிதம் அனுப்பியதில் முக்கிய பங்கு வகித்தவர் குலாம் நபி ஆசாத். குலாம் நபி ஆசாத், பாஜகவின் ஆதரவுடன் செயல்படுகிறார் என்கிற குற்றச்சாட்டும் காங்கிரஸ் கட்சியில் எழுந்திருக்கிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் கமிட்டியில் பல்வேறு மாற்றங்களை அதன் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மேற்கொண்டுள்ளார். அக்கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. புதிய பொதுச்செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலங்களுக்கும் புதிய மேலிடப் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். முகுல் வாஸ்னிக், ஹரீஷ் ராவத், உம்மன் சாண்டி, தாரிக் அன்வர், பிரியங்கா காந்தி, ரந்தீப் சிங் சுர்ஜிவாலா, ஜிதேந்திர சிங், அஜய் மாகென் ஆகியோர் புதிய பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
ஏற்கனவே பொதுச்செயலாளர்களாக இருந்த குலாம்நபி ஆசாத், அம்பிகா சோனி, மோதிலால் வோரா, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் அப்பதவிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சோனியா காந்திக்கு அமைப்பு ரீதியாக ஆலோசனை வழங்கும் சிறப்புக் குழுவில் அம்பிகா சோனி இடம்பெற்றுள்ளார். அக்குழுவில் ஏகே அந்தோணி, அகமது பட்டேல், கேசி வேணுகோபால், முகுல் வாஸ்னிக் ரந்தீப் சுர்ஜிவாலா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications