சவரன் தங்கம் விலை ரூ 30,000.. இப்படியே போனால் இனி தங்கத்தை பார்க்கலாம்.. வாங்க முடியாது போல!
டெல்லி: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 30 ஆயிரத்தை தாண்டியது.
இந்திய பொருளாதார மந்த நிலை, ரூபாய் நோட்டு சரிவு மற்றும் அமெரிக்கா- சீனா இடையே வர்த்தகப் பதற்றத்தால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கடந்த 40 நாட்களாக தங்கத்தின் விலை புதிய உச்சத்தை பெற்று வருகிறது. அந்த வகையில் 40 நாட்களில் தங்கத்தின் விலை ரூ 3640 அதிகரித்துள்ளது. அப்படிப்பட்ட தங்கத்தின் விலை நேற்றைய தினம் ரூ 128 அதிகரித்து ரூ. 29,744-க்கு விற்பனை செய்யப்பட்டது.

புதிய உச்சம்
ஒரு கிராமுக்கு ரூ 16 அதிகரித்து ரூ 3,718-க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 288 உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு சவரன் தங்கம் ரூ 30,120-க்கு விற்பனையாகிறது. அது போல் ஒரு கிராம் தங்கம் ரூ 3,765-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதிர்ச்சி
வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 2.60 உயர்ந்து ரூ 55.20-ஆக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இரண்டே நாட்களில் 23 டாலர்கள் உயர்ந்து 1,543 டாலரானது. இதனால் தங்கம் வாங்குபவர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

நடுத்தர மக்கள்
தற்போது ஆவணி மாதம் முகூர்த்த மாதம் என்பதால் திருமணம் செய்வோர் கடும் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர். அரை பவுன் தாலிக் கூட வாங்க முடியாத நிலையில் திருமண நாட்களை குறித்துள்ள நடுத்தர மக்களும் கூலித் தொழிலாளிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொருளாதார மந்தநிலை
இப்படியே போனால் இனி தங்கத்தை ஏதோ அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக பார்ப்பது போல் பார்க்க வேண்டிய நிலை உருவாகும் என்பதில் சந்தேகமே இல்லை. தங்கத்தின் விலை உயர்வுக்கு பொருளாதாரத்தின் மந்த நிலையே காரணம் என கூறப்படுகிறது.
-
தலைகீழாகப் போகுதே தங்க மார்க்கெட்! இந்த நேரத்துக்கெல்லாம் 2 லட்சம் போயிருக்கனும்! தொடர் சரிவு ஏன்? -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து?












Click it and Unblock the Notifications