எல்லையில் வாலாட்டும் சீனாவுக்கு செக் வைக்க சூப்பர் திட்டம்..27 ஆயிரம் கோடி மதிப்பு..இந்தியா பிளான்
டெல்லி: எல்லையில் சமீப காலமாக அடிக்கடி அத்துமீறும் சீனாவுக்கு செக் வைக்கும் விதமாக சூப்பர் திட்டம் ஒன்றை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை உள்ளது. குறிப்பாக இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான அருணாசல பிரதேசத்திற்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது.
எல்லையில் அடிக்கடி ஊடுருவுவதும் இந்திய படைகள் விரட்டியடிக்கும் நிகழ்வுகளும் அவ்வப்போது நடக்கும் சம்பவங்களாக மாறி வருகிறது.

இந்தியா சீனா பிரச்சினை
குறிப்பாக கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந் தேதி லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய ராணுவ வீரர்களுடன் சீன படையினர் கை கலப்பில் ஈடுபட்டனர். இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இது இந்தியாவை கொந்தளிக்க செய்தது. இந்திய வீரர்கள் திருப்பி அடித்ததில் 40 சீன வீரர்கள் வரை கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இந்த மோதல் சம்பவத்திற்கு பிறகு எல்லையில் பதற்றம் அதிகரித்தது. இந்தியா - சீனா இடையேயான உறவிலும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவானது.

கண்காணிப்பு பணியில்..
இந்த பதற்றத்தை தணிக்க பல சுற்றுக்களாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு எல்லையில் பல இடங்களில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் தங்களது முந்தைய இடத்திற்கு சென்றனர். இருந்தாலும் சீனா எப்போது வேண்டும் என்றாலும் வாலாட்டலாம் என்பதால் எல்லையில் இந்திய படைகள் உன்னிப்பாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தன.

ஓட ஓட விரட்டியடிப்பு
இந்த நிலையில் தான் கடந்த 9 ஆம் தேதி அருணாசல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் சீன படைகள் மீண்டும் அத்துமீறின. ஆனால், எதற்கும் தயாராக இருந்த இந்திய படைகள் சீன வீரர்களை ஓட ஓட விரட்டியடித்தனர். இதனால், தப்பித்தோம் பிழைத்தோம் என சீன வீரர்கள் ஓட்டம் பிடித்தனர். இந்த மோதலில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நாடாளுமன்றத்திலும் விளக்கம் அளித்து இருந்தார்.

இருவழிச்சாலை அமைக்க திட்டம்
இந்த நிலையில், சீனாவின் வாலாட்டலுக்கு செக் வைக்கும் விதமாக சூப்பர் திட்டம் ஒன்றை இந்தியா செயல்படுத்த உள்ளது. அதாவது தீபெத், சீனா, மியான்மர் எல்லையை ஒட்டிய பகுதிகள் வழியாக சுமார் 1,748 கி.மீட்டர் தொலைவுக்கு இரு வழிச்சாலை அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த சாலை சில இடங்களில் சர்வதேச எல்லையில் இருந்து வெறும் 20 கி.மீட்டர் தொலைவில் அமைய இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்தியாவின் எல்லை பாதுகாப்புக்கு
NH-913 என முன்மொழியப்பட்ட இந்த சாலை பாதுகாப்பு தளவாடங்களை எல்லை பகுதிகளுக்கு விரைவாகவும் எளிதாகவும் கொண்டு செல்லும் வகையில் அமையும் என்று தெரிகிறது. சீனா அடிக்கடி அத்துமீறலில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தியாவின் எல்லை பாதுகாப்புக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த சாலை கட்டமைப்பு இருக்கப்போவதாக நிபுணர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த நெடுஞ்சாலை பொம்டிலா என்ற இடத்தில் தொடங்கி நஃப்ரா ஹுரி மற்றும் மோனிகோங் வழியாக செல்லும். இந்த பகுதிகள் இந்தியா - திபெத் எல்லையை ஒட்டி அமைந்துள்ளன. சீன எல்லையை ஒட்டி அமைந்து இருக்கும் ஜிடோ வழியாகவும் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

27 ஆயிரம் கோடி மதிப்பு
இந்த ஒட்டுமொத்த சாலையும் 9 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த சாலை திட்டத்திற்கான மதிப்பு 27 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்று மத்திய சாலைப்போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி கூறியிருந்தார். ஆனாலும் இந்த செலவினங்களை குறைப்பதற்கான சாத்தியங்களையும் பரிசீலித்து வருகிறது. இந்த சாலையில் 800 கி.மீட்டர் பாதை பசுமை வழியாக அமைய உள்ளது. ஏனென்றால் சாலைகள் இப்பகுதிகளில் இல்லை. புதிதாக அமைக்கப்பட உள்ளது. சில சுரங்கங்கள் மற்றும் மேம்பாலங்களுடன் இந்த சாலை அமைய உள்ளது. இந்த சாலை திட்டம் 2026-27 ஆண்டுக்குள் முழுமையாக நிறைவு அடையும் என்று அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்!












Click it and Unblock the Notifications