மசோதாக்களை திருப்பி அனுப்பினால் ஆளுநர் காரணத்தை சொல்லத்தான் வேண்டும்: தமிழ்நாடு அரசு வாதம்
டெல்லி: சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை திருப்பி அனுப்பும் போது ஆளுநர் அதற்கான காரணங்களை சொல்லத்தான் வேண்டும்; தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அப்படி எந்த காரணத்தையும் சொல்லவில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பு வாதிட்டது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கில் தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி, பிஆர் வில்சன் ஆகியோர் ஆஜராகினர்.

இன்றைய வழக்கில் தமிழ்நாடு அரசு தரப்பு வாதம்:
- மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
- ஆளுநரின் செயலால் 8 கோடி தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
- 8 கோடி தமிழ் மக்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய கடமை உள்ளது
- 2020-ம் ஆண்டு முதல் 13-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை
- எந்த ஒரு காரணமும் இல்லாமல் மசோதாக்களை ஆளுநர் ரவி நிராகரிக்கிறார். ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றத்துக்கு வந்து முறையிட முடியாது.
- I withhold assent என்ற குறிப்புடன் மட்டுமே ஆளுநர் மசோதாக்களை திருப்பி அனுப்பியதால் சட்டசபையில் மீண்டும் மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளோம்.
- ஆளுநர் withhold assent என்ற வெறுமனே சொல்ல முடியாது; அதற்கு காரணத்தை குறிப்பிட வேண்டும் என்கிறது அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவு.
- மசோதாக்களை ஆளுநர் எந்த குறிப்பும் இல்லாமல் திருப்பி அனுப்பி இருப்பது சட்டத்தை மீறியதாகும்.
- சட்டசபையில் 2-வது முறையாக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பினால் அதை ஜனாதிபதிக்கு அனுப்ப முடியாது; மசோதாக்களை ஆளுநரால் கிடப்பில் போடவும் முடியாது.
- ஆளுநர் முடிவுக்காக காத்திருப்போம் என்பது அச்சத்தை தரக் கூடியதாக இருக்கிறது
- மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க கால நிர்ணயம் செய்ய வேண்டும்.
- மாநில அரசு மற்றும் அமைச்சர்கள் ஆலோசனைப்படிதான் ஆளுநர் செயல்பட வேண்டும். தமிழ்நாடு ஆளுநர் ஒவ்வொரு நிபந்தனையையும் மீறி இருக்கிறார்.
- 2வது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் தர வேண்டும்
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications