முதலில் ஆளுநர் யார்? பணி என்ன தெரியுமா? சட்டசபை கூட்டம் செல்லுமா என ஏன் கவலை? வெளுத்த உச்சநீதிமன்றம்!
டெல்லி: பஞ்சாப் மாநில சட்டசபை கூட்டத் தொடர் செல்லுமா? செல்லாது என்பது ஆளுநர் பன்வார்லால் புரோஹித்துக்கு தொடர்பே இல்லாத விவகாரம்; பஞ்சாப் மாநில சட்டசபை கூட்டம் செல்லும்; பஞ்சாப் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்; ஆளுநர் என்பவர் ஜனாதிபதியால் மாநில தலைவராக பெயரளவுக்கு நியமிக்கப்படுவர் மட்டுமே என உச்சநீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநில ஆளும் ஆம் ஆத்மி அரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தர மறுத்த மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சட்டசபை கூட்டத் தொடர் செல்லாது என கடிதம் அனுப்பி இருந்தார். பஞ்சாப் மாநில ஆளுநரின் இத்தகைய போக்குக்கு எதிராக மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

பஞ்சாப் மாநில அரசின் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா பெஞ்ச் கூறியதாவது: பஞ்சாப் மாநில சட்டசபை கூட்டம் செல்லுமா? செல்லாதா? என ஆளுநர் அக்கறைப்பட வேண்டியது இல்லை. பஞ்சாப் சட்டசபை கூட்டத் தொடர் செல்லும்தான். பஞ்சாப் மாநில அரசு சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்கள் மீது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முடிவெடுக்க வேண்டும். சட்டசபை கூட்டம் செல்லுமா? செல்லாது என ஆளுநர் ஆய்வு செய்வது ஜனநாயக சீர்குலைவுக்கு வழி வகுக்கும். சட்டசபை கூட்டத் தொடர் செல்லுமா? செல்லாதா? என அரசியல் சாசனம் ஆளுநருக்கு ஆய்வு செய்ய அதிகாரம் தரவில்லை.
ஆளுநர் என்பவர் ஜனாதிபதியால் ஒரு மாநிலத்தின் தலைவராக பெயரளவுக்கு நியமிக்கப்படுகிறவர். அரசியல் சாசனம் தொடர்பான விவகாரங்களில் அரசாங்கத்துக்கு வழிகாட்டக் கூடியவர் அவ்வளவுதான். மாநில அரசும் ஆளுநரும் ஜனநாயகத்தை சீர்குலைக்க கூடாது. ஒரு மாநில அரசாங்கம் தன்னிச்சையாக சட்டசபை கூட்டத் தொடரை காலவரையின்றி ஒத்திவைக்க முடியுமா? ஜனநாயகம் முறையாக செயல்பட ஆளுநர்களும் முதல்வர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஆளுநரை சட்டசபையில் முதல்வர் கடுமையான வார்த்தைகளில் விமர்சித்திருப்பது சரியல்ல. சட்டசபையில் முதல்வர் பயன்படுத்துவதற்கான வார்த்தைகள் இருக்கின்றன. சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் இருந்தால் நாடாளுமன்ற ஜனநாயகம் என்னவாகும்?. இவ்வாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் கேள்வி எழுப்பியது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications