சாமானியர்கள் மீது சவுக்கடி.. பெட்ரோல், டீசல் மீது வரியை கூட்டிய கையோடு.. மொபைல் போனுக்கு 18% ஜிஎஸ்டி
டெல்லி: கொரோனா காரணமாகவும், பொருளாதார மந்த நிலை காரணமாகவும், மக்களிடம் பணப்புழக்கம் குறைந்துள்ள நிலையில், அடுத்தடுத்து இரு அதிர்ச்சியை மத்திய அரசு இன்று மக்களுக்கு அளித்துள்ளது.
உலக அளவில் கச்சா எண்ணை விலை குறைகிறது. ஆனால், திடீரென மத்திய அரசு, பெட்ரோல், டீசல் விலை மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.3 வரை உயர்த்தி இன்று அறிவித்துள்ளது. இந்த அதிர்ச்சி ஓய்வதற்குள், செல்போன்கள் மீதான ஜிஎஸ்டி வரியை உயர்த்த ஜிஎஸ்டி குழு முடிவு செய்துள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 39வது கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து மாநில நிதியமைச்சர்களும் பங்கேற்றனர்.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 39 வது கூட்டத்தில், மொபைல் போன்கள் 18 சதவீத வரி அடுக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. மொபைல் போன்களின் சில உதிரிபாகங்கள் வரியும் கூட்டப்பட்டுள்ளது. முன்னதாக இவை 12% பிரிவில் இருந்தது. எனவே, மொபைல் போன்களுக்கான வரி 6% அதிகரித்துள்ளது.

எனவே, வரும் காலங்களில், மொபைல் போன்கள் விலை அதிகரித்துவிடும். ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து புதிய வரி அமலுக்கு வருகிறது.
மொபைல் போன்கள் விலை முன்பை விட அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஏற்கனவே ஒரு ஐயம் இருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக, அதன் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவால் வழங்கப்பட்ட செல்போன் சப்ளைதான் அதிகம். ஆனால் அங்குதான் கொரோனா பாதிப்பும் அதிகம். எனவே, உற்பத்தி இல்லாமல், மொபைல் போன்கள் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஜிஎஸ்டி வரியையும் கூட்டியுள்ளதால், மக்கள் நிலை பரிதாபம்தான்.

விமானத்தின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு (எம்.ஆர்.ஓ) சேவை ஜி.எஸ்.டி வீதம் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது 18 சதவீத அடுக்கில் இருந்தது, இப்போது அது 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எம்.ஆர்.ஓ சேவையை ஊக்குவிக்கும் நோக்கத்திற்காக ஜி.எஸ்.டி கவுன்சில் இந்த முடிவை எடுத்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications