என்ன 8ம் வகுப்பு வரை இந்தி கட்டாயமா? மத்திய அரசு விளக்கம்!
8ம் வகுப்பு வரை இந்தியை கட்டாயமாக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
டெல்லி: 8ம் வகுப்பு வரை இந்தியை கட்டாயமாக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன் அந்த பரபரப்பான செய்தி வெளியானது. மத்திய அரசு நாடு முழுக்க இந்தியை கட்டாய பாடமாக அறிவிக்க போவதாக செய்திகள் வெளியானது. 8ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் என்று அறிவிக்க போவதாக தகவல்கள் வெளியானது.
இந்த செய்தி தமிழகத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. கல்வியாளர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இந்தி ஆய்வு
இந்தியை கட்டாயம் ஆக்குவதற்காக மத்திய குழு புதிய பரிந்துரையை செய்துள்ளதாகவும், அடுத்த நாடளுமன்ற கூட்டத்தொடரில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும், மத்திய அரசு இதற்கான செயல்திட்டங்களை வகுத்து வருவதாகவும் தகவல்கள் வந்தது.

பெரிய பரபரப்பு
இந்த செய்தி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. மீண்டும் இந்தி திணிப்பு செய்யப்படுகிறதா என்று அதிர்வை ஏற்படுத்தியது. இந்த முறை தமிழகம் மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களிலும் இந்தி திணிப்பிற்கு எதிராக குரல்கள் எழ தொடங்கியது.

மறுப்பு தெரிவித்தார்
இந்த நிலையில் மத்திய அரசு இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியை திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று கூறியுள்ளது. பட திட்டத்தில் இந்தியை கொண்டு வர மத்திய பாஜக அரசு முயற்சி செய்யவில்லை என்று இந்த செய்திக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மறுப்பு தெரிவித்தார்
இந்த நிலையில் மத்திய அரசு இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியை திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று கூறியுள்ளது. பட திட்டத்தில் இந்தியை கொண்டு வர மத்திய பாஜக அரசு முயற்சி செய்யவில்லை என்று இந்த செய்திக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
|
என்ன சொல்கிறார்
இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேக்கர் தனது டிவிட்டில் ''8ம் வகுப்பு வரை எந்த மொழிப்பாடமும் கட்டாயம் என்று புதிய கல்வி கொள்கையில் குறிப்பிடப்படவில்லை. இது தொடர்பாக வெளியான செய்திகள், தகவல்கள் அனைத்தும் முழுக்க முழுக்க தவறானது'' என்று கூறியுள்ளார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications