விவசாயிகளை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் முயற்சி- ராகுல், பிரியங்கா, அகிலேஷ், தேஜஸ்வி சீற்றம்
டெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் முயற்சிகளுக்கு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். குடியரசு தினத்தன்று விவசாயிகள் போர்வையில் சில விஷமிகள் போலீசாருடன் மோதினர்.
இதனால் டெல்லி போர்க்களமானது. இதனைத் தொடர்ந்து போராட்டங்களில் இருந்து விலகுவதாக இதுவரை 4 விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனிடையே போராடும் விவசாயிகளை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை காசிப்பூர் பகுதியில் உபி அரசு மேற்கொண்டுள்ளது.

கட்டாயமாக அப்புறப்படுத்துதல்
ஆனால் விவசாயிகளோ தங்களது போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். இந்த நிலையில் வலுக்கட்டாயமாக விவசாயிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
|
ராகுல் ட்வீட்
மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில், நான் யார் பக்கம் என்பதை தேர்வு செய்ய வேண்டிய தருணம். என்னுடைய முடிவு தெளிவானது. நான் விவசாயிகள் பக்கமே நிற்கிறேன். நான் ஜனநாயகத்தின் பக்கம் நிற்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
|
பிரியங்கா காந்தி
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் ஜனநாயகத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்கு சமம். விவசாயிகளின் போராட்டத்துக்கு காங்கிரஸ் துணை நிற்கும். விவசாயிகளை ஒடுக்க நினைப்பவர்கள் துரோகிகள் என கூறியுள்ளார்.
|
அகிலேஷ், தேஜஸ்வி
சமாஜ்வாதி மூத்த தலைவர் அகிலேஷ் யாதவ், இன்று வேண்டுமானால் போராடும் விவசாயிகள் அப்புறப்படுத்தப்படலாம்; நாளை பாஜகதான் வீதிக்கு வரும் என காட்டமாக கூறியுள்ளார். ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், போராடும் விவசாயிகளின் பக்கமே ஆர்ஜேடி நிற்கிறது என கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications