இந்திரா காந்தியை போல் என்னையும் கொன்றுவிடுவார்கள்.. பகீர் கிளப்பும் கெஜ்ரிவால்!
டெல்லி: இந்திரா காந்தியை போல் என் பாதுகாவலர்களே என்னையும் சுட்டுக்கொன்று விடுவார்கள் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 11ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 6 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் பஞ்சாப், மேற்குவங்கம் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் 59 தொகுதிகளுக்கு நாளை இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

ஆம் ஆத்மி பிரச்சாரம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் தேர்தல் நடைபெற்றது. இதற்காக பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன. கடந்த 4ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மோட்டி நகரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கன்னத்தில் அறை
பிரச்சாரத்தின் போது இளைஞர் ஒருவர் அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொலை செய்ய சதி
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தன்னை கொலை செய்ய சதி நடப்பதாக கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.

இந்திராவை போல்
இந்திரா காந்தியை போல் எனது தனிப்பட்ட பாதுகாவலர்களாளேயே நான் சுட்டுக்கொல்லப்படலாம். பாஜக ஒரு நாள் என் வாழ்க்கையை முடித்து என்னை தீர்த்துக்கட்டிவிடும். எனது பாதுகாவலர்கள் மோடிக்குத்தான் வாக்களித்துள்ளனர். இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

போலீஸ் பாதுகாப்பு
ஆனால் முதல்வருக்கான பாதுகாப்பில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டு அவர்கள் பணியில் இருப்பதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைத்து அரசியல் கட்சிகளின் உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கும் பாதுகாப்பு வழங்கி வருவதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

பரபரப்பு
பாஜக பாதுகாவலர்கள் தன்னையும் கொன்று விடுவார்கள், தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications