மாயமான ஏ.என்-32 ரக விமானம் விபத்தில் சிக்கி நொறுங்கியது.. 13 பேர் கதி என்ன?
தகவல் கிடைத்துள்ளது. எனினும் இதில் பயணித்தவர்களின் நிலை என்னவானது என்ற தகவலை இதுவரை கண்டறிய முடியவில்லை.
இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏஎன் 32 ரக போர் விமானம் மிகவும் சிறிய ரக விமானம் ஆகும். இதில் 25 பேர் வரை பயணம் செய்யலாம். இந்த விமானங்களில் உணவு பொருள் எடுத்துச் செல்வதற்கும், மலை பாங்கான பகுதிகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இந்த விமானம் 5 பயணிகள் மற்றும் 8 விமான குழுவினர் என மொத்தம் 13 பேருடன் அசாமின் ஜோர்கத் தளம் பகுதியில் இருந்து மதியம் 12.25 மணிக்கு அருணாசலப் பிரதேசத்தில் உள்ள மெஞ்சுகா பகுதிக்கு சென்று கொண்டிருந்தது.

துண்டிப்பு
மெஞ்சுகா பகுதியின் விமான ஓடுதளம் சீன எல்லை அருகே உள்ளது. இந்த நிலையில் கடந்த 1 மணியிலிருந்து அந்த விமானத்தின் ரேடார் சிக்னல் துண்டிக்கப்பட்டு விட்டது. சுமார் 2 மணி நேரமாக இந்த விமானத்தை காணவில்லை. காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் சுகோய் 30, சி-130 ரக விமானங்கள் ஈடுபட்டன

விபத்தில் சிக்கி நொறுங்கியது
இந்நிலையில் மாயமான இந்திய விமான படையின் ஏ.என்-32 ரக விமானம் விபத்தில் சிக்கி நொறுங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது மாயமான விமானத்தின் உடைந்த பாகங்கள் தற்போது கண்டறியப்பட்டுள்ளது அருணாசலப்பிரதேசத்தின் மேற்கு சியாங் மாவட்டத்தின்டாடோ என்ற இடத்தில் மாயமான விமான பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன

13 பேரின் நிலை என்ன
மாயமான இந்திய விமானப்படை விமானம் விபத்தில் சிக்கியுள்ளது உறுதியான நிலையில் அதில் பயணம் செய்த 13 பேரின் நிலை என்னவானது என தெரியவில்லை இந்த விமானத்தில் 5 பயணிகள் மற்றும் 8 விமான குழுவினர் என மொத்தம் 13 பேர் பயணம் செய்ததாக விமானப்படை தகவல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

ஏஎன் ரகம்
அதுபோல் கடந்த ஜூன் 2016-ஆம் ஆண்டு சென்னை தாம்பரம் விமான தளத்திலிருந்து அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு 29 பேரை ஏற்றிக் கொண்டு சென்ற இந்திய விமான படையின் ஏஎன் 32 ரக விமானம் புறப்பட்ட அரை மணி நேரத்தில் ரேடாரில் இருந்து மறைந்தது.

கிடைக்கவில்லை
இதையடுத்து தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. கடந்த செப்டம்பர் மாதம் 2016-ஆம் ஆண்டு வரை அந்த விமானம் கடல்பகுதியில் தேடப்பட்டது. எனினும் அந்த விமானம் கிடைக்கப்படவில்லை.

விடை தெரியா 29 பேரின் நிலை
இதனால் கடலில் விழுந்து விமானம் நொறுங்கியிருக்கலாம் என்றும் அதில் பயணம் செய்த 29 பேரும் பலியாகியிருக்கக் கூடும் என கருதப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்று வரை அந்த விமானத்தில் நிலை தெரியவில்லை. இந்த நிலையில் தற்போது சீன எல்லை அருகே காணாமல் போன இந்திய விமான படைவிமானம் விபத்தில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications