ஆசைபட்டப்படி மீண்டும் பிரதமராகிட்டீங்க.. விஷயத்துக்கு வாங்க.. மோடிக்கு இம்ரான் கான் கடிதம்
டெல்லி: காஷ்மீர் உள்ளிட்ட, இரு நாடுகளுக்கு நடுவேயான பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கோரிக்கைவிடுத்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, மீண்டும் மோடியே பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என கருத்து தெரிவித்தவர் இம்ரான் கான்.
அவர் ஆசைப்பட்டபடியே, மோடி மீண்டும் பிரதமராகியுள்ளார். இந்த நிலையில்தான், மோடிக்கு இம்ரான்கான், கடிதம் எழுதி பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுத்துள்ளதாக, அந்த நாட்டு பிரபல ஊடகமான ஜியோ டிவியில் செய்தி வெளியாகியுள்ளது.

கடிதம்
ஜியோ டிவி சேனல் வெளியிட்ட செய்தியில், இந்திய பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக மோடிக்கு, இம்ரான் கான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாகவும், இரு நாட்டிலும் நிலவும் ஏழ்மையை, போக்கவும், இரு நாட்டு ஒத்துழைப்பை அதிகரிக்கவும் பேச்சுவார்த்தைதான் உதவும் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரம்
காஷ்மீர் உட்பட இரு நாடுகள் நடுவேயான அனைத்து பிரச்சினைகளையும் பேசி தீர்க்க பாகிஸ்தான் விரும்புகிறது என்று அந்த கடிதத்தில் இம்ரான் கான் வலியுறுத்தி கேட்டுக் கொண்டதாக ஜியோ டிவி செய்தி மேலும் தெரிவிக்கிறது.

பயங்கரவாதம்
இம்ரான் கான் அழைப்புக்கு இந்தியா இதுவரை பதில் தரவில்லை. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தாதவரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை கிடையாது என்ற நிலைப்பாட்டை இந்தியா தொடர்ந்து வருகிறது என்பதால், இம்ரான் கான் அழைப்பை இந்தியா பொருட்படுத்தப்போவதில்லை என டெல்லியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேச்சுவார்த்தைக்கு மறுப்பு
கிரிகிஸ்தானில் அடுத்த வாரம், நடைபெற உள்ள மண்டல உச்சிமாநாட்டில், பங்கேற்க வரும் இம்ரான்கானை, பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என இந்தியா அறிவித்த நிலையில், இம்ரான் கான் இவ்வாறு ஒரு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
கண்கள் சிவந்த டிரம்ப்.. பாகிஸ்தான் எடுக்கும் முடிவு.. ஆனால் "அந்த" ஒரு சிக்கல் இருக்கே! அடுத்து என்ன -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications