என்ன அடி.. பவுன்சர்களை துவம்சம் செய்த இளம் வீரர்.. கேப்டன் மெட்டீரியல்.. மூத்த வீரருக்கு வசமான செக்!
டெல்லி: இந்திய டெஸ்ட் அணியில் மூத்த வீரர்களை நீக்கிவிட்டு புதிய வீரர்களை கொண்டு வரலாம் என்று பிசிசிஐ ஆலோசனை செய்து கொண்டு இருக்கும் நிலையில்தான் இளம் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் இன்று மிகவும் சிறப்பாக ஆடி கவனத்தை ஈர்த்து உள்ளார்.
Recommended Video
இந்தியா நியூசிலாந்து இடையிலான டி 20 தொடர் முடிவிற்கு வந்த நிலையில் தற்போது டெஸ்ட் தொடர் தொடங்கி உள்ளது. ரோஹித், பண்ட் போன்ற வீரர்களுக்கு இந்த தொடரின் இரண்டு போட்டியில் இருந்தும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
கோலி முதல் டெஸ்டில் இருந்து மட்டும் ஓய்வு பெற்றுள்ளார். அடுத்த டெஸ்டில் இந்திய அணியில் கோலி மீண்டும் கேப்டனாக இணைவார்.

கேப்டன்
இதனால் இன்றைய போட்டியில் ரஹானே கேப்டனாக இந்திய அணியில் செயல்பட்டார். இன்று நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணியில் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா, சாகா, அக்சர் பட்டேல், அஸ்வின், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் ஆடும் அணியில் சேர்க்கப்பட்டனர். டாஸ் வென்ற கேப்டன் ரஹானே இன்று பேட்டிங் தேர்வு செய்தார்.

பேட்டிங்
இதையடுத்து பேட்டிங் இறங்கிய இந்திய அணியில் இந்த முறையும் மயங்க் அகர்வால் மோசமாக பேட்டிங் செய்து சொதப்பினார். வெறும் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஜெமிசன் பந்தில் அவர் அவுட் ஆனார். அதன்பின் கில் மட்டும் கொஞ்சம் நிதானமாக ரன் சேர்த்துக்கொண்டு இருந்தார். 52 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் ஜெமிசன் பந்தில் போல்ட் ஆனார்.

மூத்த வீரர்கள்
இதனால் மூத்த வீரர்கள் புஜாரா, ரஹானே மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. புஜாரா ஒரு பக்கம் தொடக்கத்தில் இருந்தே சரியான ரிதம் கிடைக்காமல் திணறினார். 88 பந்துகள் பிடித்தவர் 26 ரன்கள் எடுத்த போது சவுதி பந்தில் அவுட்டாகி வெளியேறினார். மயங்க் போலவே கீப்பர் டாமிடம் கேட்ச் கொடுத்து புஜாரா அவுட் ஆனார்.

புஜாரா
கேப்டனாக ரஹானே பொறுப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தேவையான இடைவெளியில் பவுண்டரி அடித்தவர் 6 பவுண்டரி அடித்த நிலையில் 63 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஜெமிசன் பவுலிங்கில் மீண்டும் போல்ட் ஆனார். டெஸ்டில் அறிமுகம் ஆனதில் இருந்தே ஜெமிசன் மிக சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். பவுன்சர் மற்றும் சரியான லேன்தில் ஸ்டம்பை நோக்கி பந்து வீசி விக்கெட் எடுப்பதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.

ஜெமிசன்
இன்றும் ஜெமிசன் பவுலிங் மிக அச்சுறுத்த கூடிய ஒன்றாகவே இருந்தது. டாப் ஆர்டர் வீரர்கள் எல்லோரும் சரிந்த நிலையிலும் இன்று ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது. தொடர்ந்து லோக்கல் போட்டிகளில் ஆடிய காரணத்தால் முதல் போட்டி என்ற அறிகுறியே தெரியாத அளவிற்கு இன்று அவர் மிகவும் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

முதிர்ச்சி
அதிலும் ஜெமிசன், சவுதியின் அச்சுறுத்த கூடிய ஷார்ட் பந்துகளை ஷ்ரேயாஸ் ஐயர் மிகவும் நுணுக்கமாக எதிர்கொண்டார். மோசமாக டாப் ஆர்டர் சரிந்த நிலையில் இந்திய அணியை மீட்டு எடுத்து இப்போதும் களத்தில் ஆடிக்கொண்டு இருக்கிறார். 136 பந்துகள் பிடித்தவர், 7 பவுண்டரி, 2 சிக்ஸ் என்று 75 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் இரண்டு மூத்த வீரர்களுக்கு அச்சுறுத்தலாக இவர் மாறியுள்ளார்.

மூத்த வீரர்கள்
ரஹானே, புஜாரா இருவரும் பெரிய பார்மில் இல்லை. இரண்டு பேருக்கும் வயதாகிவிட்டது. இதனால் 4வது அல்லது 5வது இடத்தில் ஆட நல்ல வீரர் இல்லை. அதற்கான சிறப்பான தேர்வாகி ஷ்ரேயாஸ் தெரிகிறார். அதோடு இவர் நல்ல கேப்டன் மெட்டீரியல் என்பதால் நீண்ட கால் வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கும். ஷ்ரேயாஸ் ஆடிய இன்றைய காட்டம் காரணமாக இந்திய அணியில் மூத்த வீரர்களுக்கு செக் வைத்து விரைவில் நிரந்தர இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications