32 ஐரோப்பிய நாடுகள், துருக்கி சுற்றுலா பயணிகள் இந்தியா வர மார்ச் 18 முதல் தடை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐரோப்பியாவின் 32 நாடுகள் மற்றும் துருக்கி நாட்டவர்கள் இந்தியாவுக்குள் நுழைய மார்ச் 18-ந் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    கொரோனா Update: இதுவரை 3 பேர் உயிரிழப்பு

    உலகை தாக்கிய கொரோனா வைரஸ், இந்தியாவிலும் 2 பேரை பலி கொண்டிருக்கிறது. 100க்கும் அதிகமானோர் கொரோனா தாக்குதால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    India bans entry of travellers from 32 European countries

    இந்த நிலையில் நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களுக்கு மார்ச் 31 வரை மத்திய அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதேபோல் பொதுமக்களின் ஒன்று கூடும் நிகழ்வுகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது.

    இதனிடையே 32 ஐரோப்பிய நாடுகள் மற்றும் துருக்கி நாட்டவர்கள் இந்தியாவுக்கு வர மார்ச் 18-ந் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கத்தார், ஓமன் மற்றும் குவைத் நாடுகளில் இருந்து வரும் பயணிகள் 14 நாட்கள் பரிசோதனைக்குட்படுத்தப்படுவர்.

    ஏற்கனவே சீனா, இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருகிற பயணிகள் கடுமையான மருத்துவ கண்காணிப்புக்குட்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+