அரசியல் சாசன நாள்- ராகுல் காந்தியை பேச அழைக்கனும்.. லோக்சபா சபாநாயகருக்கு இந்தியா கூட்டணி கடிதம்
டெல்லி: அரசியல் சாசன தினத்தை முன்னிட்டு நாடாளுமன்ற பழைய கட்டிடத்தின் மைய மண்டபத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும் பேசுவதற்கு அழைக்க வேண்டும் என்று லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு 'இந்தியா' கூட்டணியின் தலைவர்கள் கடிதம் அனுப்பி உள்ளனர். பழைய நாடாளுமன்ற வளாக மைய மண்டபத்தில் நாளை நடைபெறும் அரசியல் சாசன நாள் நிகழ்வில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
நாடு விடுதலை அடைந்த பின்னர் 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி இந்திய அரசியல் சாசனம் ஏற்கப்பட்டது. இது 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி நடைமுறைக்கு வந்தது. அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்த ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடியின் முதலாவது ஆட்சியில்தான் நவம்பர் 26-ந் தேதி அரசியல் சாசன நாளாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ந் தேதி இந்திய அரசியல் சாசன நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு டெல்லியில் அரசியல் சாசன நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் உள்ளிட்டோர் நாளை பங்கேற்கின்றனர். நாளை மாலை உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
இந்த நிலையில் இன்று டெல்லியில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில் எப்படி செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் பழைய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நாளை நடைபெறும் அரசியல் சாசன நிகழ்ச்சியில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும் பேச அனுமதிக்க வேண்டும் என லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் அனுப்பவும் இந்தியா கூட்டணி தலைவர்கள் தீர்மானித்தனர்.
ஆனால் இதனை மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். இது தொடர்பாக கிரண் ரிஜுஜூ கூறுகையில், என்ன நிகழ்ச்சி நிரல் என்பது கூட தெரியாமல் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இருக்கின்றனர். பழைய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பிரதமர் மோடி பேசவில்லை என்பது கூட அவர்களுக்கு தெரியவில்லை என்றார்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications