Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசியல் சாசன நாள்- ராகுல் காந்தியை பேச அழைக்கனும்.. லோக்சபா சபாநாயகருக்கு இந்தியா கூட்டணி கடிதம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அரசியல் சாசன தினத்தை முன்னிட்டு நாடாளுமன்ற பழைய கட்டிடத்தின் மைய மண்டபத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும் பேசுவதற்கு அழைக்க வேண்டும் என்று லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு 'இந்தியா' கூட்டணியின் தலைவர்கள் கடிதம் அனுப்பி உள்ளனர். பழைய நாடாளுமன்ற வளாக மைய மண்டபத்தில் நாளை நடைபெறும் அரசியல் சாசன நாள் நிகழ்வில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

நாடு விடுதலை அடைந்த பின்னர் 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி இந்திய அரசியல் சாசனம் ஏற்கப்பட்டது. இது 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி நடைமுறைக்கு வந்தது. அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்த ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடியின் முதலாவது ஆட்சியில்தான் நவம்பர் 26-ந் தேதி அரசியல் சாசன நாளாக அறிவிக்கப்பட்டது.

constitution day rahul gandhi


இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ந் தேதி இந்திய அரசியல் சாசன நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு டெல்லியில் அரசியல் சாசன நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் உள்ளிட்டோர் நாளை பங்கேற்கின்றனர். நாளை மாலை உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

இந்த நிலையில் இன்று டெல்லியில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில் எப்படி செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் பழைய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நாளை நடைபெறும் அரசியல் சாசன நிகழ்ச்சியில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும் பேச அனுமதிக்க வேண்டும் என லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் அனுப்பவும் இந்தியா கூட்டணி தலைவர்கள் தீர்மானித்தனர்.

ஆனால் இதனை மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். இது தொடர்பாக கிரண் ரிஜுஜூ கூறுகையில், என்ன நிகழ்ச்சி நிரல் என்பது கூட தெரியாமல் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இருக்கின்றனர். பழைய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பிரதமர் மோடி பேசவில்லை என்பது கூட அவர்களுக்கு தெரியவில்லை என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+