ரத்தம் தோய்ந்த வரலாறு! சீனா தாக்குதல்- 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதல்!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் எல்லையில் இதே ஜூன் 15-ல் கல்வான் பள்ளத்தாக்கில் நமது நாட்டின் 20 ராணுவ வீரர்கள் சீனாவின் தாக்குதலில் வீரமரணம் அடைந்தனர்.
கல்வான் பள்ளத்தாக்கு.. ஜம்மு காஷ்மீரின் லடாக் பிராந்தியத்தில் உள்ளது. லடாக் மற்றும் சீனா ஆக்கிரமித்திருக்கும் இந்திய நிலப்பகுதியான அக்சாய் சீனா இடையே இந்த கல்வான் பள்ளத்தாக்கு அமைந்திருக்கிறது. இந்தியா, சீனா இடையேயான எல்லை கட்டுப்பாடு கோடும் இந்த கல்வான் பள்ளத்தாக்கின் ஊடே செல்கிறது. 1962 யுத்தத்தில் கல்வான் நதி, இந்தியா, சீனா இருநாடுகளுக்கும் முக்கியமானதாக இருந்தது.

கல்வான் பள்ளத்தாக்கில் சீனா தமது பகுதியில் பல்வேறு கட்டுமானங்களை உருவாக்கி விட்டது. இதற்கு பதிலடியாக நமது பகுதியில் கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டன. இந்த கட்டுமானங்கள் சட்டவிரோதமானவை என சட்டாம்பிள்ளைத்தனமாக சீனா பேசி வந்தது. இதனையடுத்து 2020-ம் ஆண்டு இதே ஜூன் 15-ல் தான் இடைஅப்பகுதியில் இந்தியா- சீனா வீரர்களிடையே கைகலப்பும் மரணங்களும் நிகழ்ந்தன. துப்பாக்கி மோதல் எதுவும் நிகழாமல் கூரிய ஆணிகள் உள்ளிட்டவைகளை பொருத்திய கட்டைகளால் இந்திய ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டனர். முதலில் இம்மோதல்களில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. பின்னர் மேலும் 17 பேர் என மொத்தம் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என நமது ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதேநேரத்தில் கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் இழப்பு என்ன? என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் பழனி எனும் தமிழ்நாட்டு ராணுவ வீரரும் வீர மரணம் அடைந்தார்.
2017-ம் ஆண்டு பூட்டான் டோக்லாம் பகுதியில் இந்தியா- சீனா ராணுவ வீரர்களின் மோதலைத் தொடர்ந்து நிகழ்ந்த மிகப் பெரிய மோதலாகும். கல்வான் பள்ளத்தாக்கு மோதலானது இருநாடுகளிடையே யுத்த சூழ்நிலையை உருவாக்கக் கூடியதாகவும் உருமாறியது. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளிடையே பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இப்பேச்சுவார்த்தைகளில் அதிகபட்சமாக இருதரப்பும் எல்லைகளில் இருந்து படைகளை விலக்குவது தொடர்பாகவும் மட்டும் முடிவு எடுத்துள்ளன. இன்னமும் ஆக்கப்பூர்வமான முடிவுகள் இப்பேச்சுவார்த்தைகள் மூலம் உருவாக்கப்படவில்லை என்கின்றனர் பாதுகாப்பு ஆய்வாளர்கள்.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications