இந்தியா பதிலடி.. சீனாவின் முக்கிய அதிகாரி உட்பட 35 ராணுவ வீரர் பலி.. அமெரிக்க உளவுத்துறை தகவல்
டெல்லி: லடாக் எல்லையில், இந்தியாவின் பதிலடி தாக்குதலில் சீனாவுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டின் 35 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தகவலை அமெரிக்க உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.
லடாக் எல்லையில், சீன ராணுவத்துடன் நடைபெற்ற மோதலின்போது, இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணமடைந்தனர். பெரிய கற்கள், கட்டைகளை வீசி இந்த தாக்குதல் நடந்துள்ளதாக தெரிகிறது.
இதுவரை, இரு தரப்பும் துப்பாக்கியை பயன்படுத்தவில்லையாம். ஆனால் அடிதடி, கல்வீச்சிலேயே இவ்வளவு தூரம் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

அமெரிக்கா கவனிப்பு
இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்சினையை அமெரிக்கா தீவிரமாக கவனித்து வருகிறது. இது வரை சீன ராணுவம் மற்றும் சீன அரசு தங்கள் தரப்பில் எத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டது என்று தெரியவில்லை.

35 சீன வீரர்கள் பலி
இந்த நிலையில் அமெரிக்க உளவு அமைப்பு சில முக்கிய தகவல்களை சேகரித்துள்ளன. இந்திய ராணுவ பதிலடியில் 35 சீன ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதில் சீன ராணுவத்தின் முக்கிய உயர் அதிகாரி ஒருவரும் பலியானதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. இந்த தகவல் அமெரிக்க நாட்டு ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

வாய் மூடியிருக்கும் சீனா
இந்திய தரப்பு ஏற்கனவே வெளிப்படையாக 20 பேர் வீரமரணம் அடைந்ததாக தெரிவித்துள்ளது. ஆனால் சீன தரப்புதான் வாய்மூடி மவுனமாக இருந்து வருகிறது. இந்திய ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டது என்று மட்டும் அது கூறியுள்ளது.

பறந்த ஹெலிகாப்டர்கள்
இந்த நிலையில், சீனா தரப்பிலிருந்து, பல ஹெலிகாப்டர்கள் மற்றும் ஸ்ட்ரக்சர்கள் எல்லைக்கு கொண்டு வரப்பட்டதாகவும், காயமடைந்த வீரர்களை எடுத்துச் சென்றதாகவும், ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. எனவே சீன தரப்பிலும் பாதிப்பு அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சந்தேகங்கள்
சீன தரப்பில் பாதிப்பு அதிகம் என்பதால்தான், இதுவரை சீனா தங்கள் நாட்டு ராணுவ வீரர்களின் பலி எண்ணிக்கையை வெளியே தெரிவிக்காமல் இருப்பதாக சந்தேகங்கள் வலுத்து வந்தன. அமெரிக்க உளவு அமைப்பும், சீனாவுக்கு பலத்த அடி விழுந்துள்ளது என்பதை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை!












Click it and Unblock the Notifications