டிராகனை வீழ்த்த வரும் கங்காரு.. ஆஸி. பிரதமருடன் அவசர மீட்டிங் போடும் மோடி.. இந்தியா உருவாக்கும் அணி!
டெல்லி: ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் உடன் இந்திய பிரதமர் மோடி இன்று வீடியோ கால் மூலம் பேசி வருகிறார். முக்கியமான விஷயங்களை இவர்கள் இருவரும் ஆலோசனை செய்து வருகிறார்கள்.
Recommended Video
இந்தியா தற்போது சீனாவிற்கு எதிராக பெரிய நாடுகளை ஒன்று திரட்ட முயன்று வருகிறது என்றுதான் கூற வேண்டும். சீனாவிற்கு எதிரான பிரச்சனையில் ஏற்கனவே அமெரிக்காவின் ஆதரவு இந்தியாவிற்கு உள்ளது. இதில் இலங்கை நடுநிலையுடன் இருக்கும் என்று ஏற்கனவே கூறிவிட்டது.
இந்த நிலையில் சீனாவை கடுமையாக எதிர்த்து வரும் ஆஸ்திரேலியா உடன் இணைய இந்தியா முடிவு செய்துள்ளது. சீனா - ஆஸ்திரேலியா இடையே கொரோனா சண்டை, வர்த்தக போர் தொடங்கி பல்வேறு விஷயங்களில் பிரச்சனை நிலவி வருகிறது.

என்ன மீட்டிங்
இந்த நிலையில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் உடன் இந்திய பிரதமர் மோடி இன்று வீடியோ கால் மூலம் பேசி வருகிறார். முக்கியமான விஷயங்களை இவர்கள் இருவரும் ஆலோசனை செய்து வருகிறார்கள். இரண்டு நாட்டு கடற் படைகள் ஒன்றாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது குறித்து இதில் ஆலோசனை செய்து வருகிறார்கள். அதேபோல் முக்கியமான பரஸ்பர ராணுவ ஆதரவு ஒப்பந்தம் (Mutual Logistic Support Agreement) என்ற ஒப்பந்தமும் செய்யப்பட உள்ளது.

என்ன ஒப்பந்தம்
கடந்த வருடம் திட்டமிடப்பட்ட இந்த ஒப்பந்தம் இந்த வருடம் கையெழுத்தாகிறது. இதன் படி இரண்டு நாட்டு ராணுவ படைகளும் தங்களின் ராணுவ தளவாடங்களை பகிர்ந்து கொள்ளும். அதாவது ஆஸ்திரேலியாவின் ராணுவ தளவாடங்களை இந்தியா பயன்படுத்தலாம். இந்தியாவின் ராணுவ தளவாடங்களை ஆஸ்திரேலியா பயன்படுத்தலாம். இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது.

என்ன கடற்படை
அதேபோல் இரண்டு நாட்டு கடற்படையும் சேர்ந்து ஆஸ்திரேலிய கடல் பகுதி மற்றும் இந்திய கடல் பகுதியில் பயிற்சி மற்றும் ரோந்து பணிகளை இணைந்து மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட உள்ளது.AUSINDEX என்ற பெயரில் கடந்த 2015 வருடமே இந்த பணிகள் நடந்த நிலையில், அதை மீண்டும் தொடர இருக்கிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஆஸ்திரேலியாவை மலபார் குழுவில் இணைக்க மோடி முயன்று வருகிறார்.

மலபார் குழு
மலபார் என்பது கேரளாவில் இருக்கும் மலபார் இல்லை. இது இந்தியா உருவாக்கிய மூன்று நாடுகளின் சக்தி வாய்ந்த ராணுவ குழு. அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய மூன்று நாடுகள் உள்ள குழு ஆகும் இது. சீனாவை சமாளிக்கும் வகையில் இத குழு உருவாக்கப்பட்டது. கடல் பாதுகாப்பை மையப்படுத்தி இந்த குழு உருவாக்கப்பட்டது. இதில் ஆஸ்திரேலியாவை சேர்க்கும் வகையில் இன்று ஆலோசனை நடக்கும்.

சீனாவிற்கு எதிரான படை
இந்த குழு உருவாக்கப்பட்ட போதே சீனா அதை கடுமையாக விமர்சனம் செய்தது. தற்போது அதில் ஆஸ்திரேலியாவும் சேரும் என்பதால் சீனாவிற்கு எதிரான பெரிய படையை இந்தியா திரட்டுகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. இன்று நடக்கும் இரண்டு நாட்டு பிரதமர் ஆலோசனையில் சைபர் செக்கியூரிட்டி குறித்தும் ஆலோசனை செய்ய இருக்கிறார்கள். இது மிகவும் முக்கியமான மீட்டிங்காக பார்க்கப்படுகிறது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications