35 நாட்களில் 10 ஏவுகணைகள் சோதனை.. இந்தியா அதிரடி சாதனை.. சீனாவுக்கு செக்.. இனி வாலாட்டினால்...!
டெல்லி: கிழக்கு லடாக்கில் இந்தியா- சீனா இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் நிலவி வரும் நிலையில் கடந்த 35 நாட்களில் 10 ஏவுகணைகளை இந்தியா சோதனை செய்து சாதனை படைத்துள்ளது.
லடாக் எல்லையில் கடந்த மே மாதத்தில் சீன ராணுவம் இந்திய எல்லையில் அத்துமீறி நுழைய முயன்றன. அப்போது அவர்களை இந்திய ராணுவத்தினர் விரட்டியடித்தனர். இதையடுத்து ஜூன் மாதம் மீண்டும் சீனா ஊடுருவி இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இதில் 20 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணமடைந்தார்கள். அதே போல் இந்திய வீரர்கள் திருப்பி தாக்கியதில் 40-க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் கொல்லப்பட்டனர். கடந்த 40 ஆண்டுகளில் முதல்முறையாக இரு தரப்பிலும் உயிரிழப்புகள் நேரிட்டன. அடுத்த 2 மாதங்களுக்குள் சீன ராணுவம் துப்பாக்கிச் சூட்டையும் நடத்தி முடித்தது.

முயற்சி
இரு நாட்டு எல்லைப் பகுதியை அமைதியின் பாதைக்கு திருப்புவதற்கு இரு தரப்பும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் சீனாவே பேச்சுவார்த்தையின் போது வாலை சுருட்டிக் கொள்கிறது. அதன் பின்னர் எல்லையில் அதன் வேலையை காண்பிக்கிறது. இதனால் தொடர்ந்து பேச்சுவார்த்தை என்பது நடத்தப்பட்டு வருகிறது.

10 ஏவுகணைகள்
இது ஒரு புறம் இருக்க இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ அண்மையில் ஏவுகணை சோதனைகளை அடுத்தடுத்து நிகழ்த்தியது. அடுத்த வாரத்தில் சப் சோனிக் ஏவுகணையான நிர்பயையும் சோதனை செய்யவுள்ளது. இந்த ஏவுகணைகள் எல்லாவற்றையும் சேர்த்து 10 ஏவுகணைகள் 35 நாட்களில் சோதிக்கப்பட்டு இருக்கின்றன.

வேகம்
இதுகுறித்து டிஆர்டிஓ அமைப்பை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில் இந்த ஏவுகணை பரிசோதனை என்பது வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல. லடாக்கில் இருந்து வெளியேற மறுக்கும் சீன ராணுவம் மீண்டும் பிரச்சினை செய்தால் பதிலடி கொடுப்பதற்காகவே இந்த பரிசோதனைகள் வேக வேகமாக நடத்தப்பட்டன.

அணு ஆயுதம்
இதுவரை ஏற்கெனவே நடந்த 9 பரிசோதனைகளில் பிரம்மோஸ் ஏவுகணை 400 கி.மீ. அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் பெற்ற சவுரியா சூப்பர்சோனிக் ஏவுகணை, நீர்முழ்கி எதிர்ப்பு டார்பிடோக்களை செலுத்தும் ஏவுகணைகள், அணு ஆயுத திறன்பெற்ற பிரித்வி 2 போன்றவை எல்லாம் முக்கியமானவையாகும்.
-
போர்க்களத்தில் எதற்காக காண்டம்? ஒவ்வொரு வீரரின் பாக்கெட்டிலும் "இது" இருக்குமாம்.. செம சர்ப்ரைஸ் -
மோடியை கொல்ல சதி.. அலறிய அமெரிக்க CIA.. உடனே இந்தியாவுக்கு பறந்த மெசேஜ்.. 3 பேர் அதிரடியாக கைது -
கிட்டத்தட்ட எதிர்ப்பே இல்லை.. ஆனாலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சிக்கலில் மாட்டியுள்ளது ஏன்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
உடலுறவில் மனைவி கழுத்தை "இறுக்கிய" கணவர்.. பரிதாபமாக பறிபோன உயிர்.. அதிர்ச்சி சம்பவம் -
மாறப்போகிறதா இந்திய நேரம்? உஜ்ஜயினி டூ கிரீன்விச்.. மத்திய அரசின் 'மஹாகால்' பிளான் -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
அசையாமல் ஆணி அடித்தார் போல நிற்க வைக்கும் 'ஸோம்பி' போதைப்பொருள்! பெங்களூரை தொடர்ந்து பீகாரிலும் ஷாக் -
ஒடிசாவுக்கு அடித்த ஜாக்பாட்.. ரூ.33 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் அதானி குழுமம்.. கரண் அதானி அறிவிப்பு -
தங்கத்திற்கு தடை.. ரஷ்ய உத்தரவால் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயரபோகுது.. புடின் மெகா திட்டம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு












Click it and Unblock the Notifications