சிக்கிம் எல்லையில் ஊடுருவல்.. அதிரடி பதிலடி கொடுத்து சீன வீரர்களை ஓட வைத்த இந்திய ராணுவம்!
டெல்லி: சிக்கிம் எல்லையில் சீன ராணுவத்தினரின் ஊடுருவலை இந்திய ராணுவம் அதிரடியாக முறியடித்தது. இதனால் ஏற்பட்ட மோதலில் சீன வீரர்கள் 20 பேர் காயமடைந்தனர்.
கடந்த வாரம் சீன ராணுவத்தினர் இந்திய எல்லையில் ஊடுருவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து உயரதிகாரிகள் கூறுகையில் கடந்த வாரம் வடக்கு சிக்கிமின் நாகுலா பகுதியில் சீன ராணுவத்தினர் ஊடுருவினர். அப்போது அவர்களின் ஊடுருவலை இந்திய ராணுவத்தினர் முறியடித்தனர்.

அப்போது இரு தரப்பினரிடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதில் சீனாவை சேர்ந்த 20 வீரர்கள் காயமடைந்தனர். இந்திய தரப்பில் 4 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. வடக்கு சிக்கிமில் மோசமான வானிலை நிலவி வரும் நிலையிலும் சீன ஊடுருவலை இந்தியா முறியடித்துவிட்டது.
தற்போது சிக்கிமில் பதற்றம் நிலவி வருகிறது. எனினும் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என தெரிவித்தனர்.
இந்திய- சீன எல்லையில் கடந்த ஆண்டு முதல் பதற்றம் நீடித்து வருகிறது. சீன ராணுவத்தினர் அவ்வப்போது இந்திய எல்லையில் ஊடுருவும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் லடாக் எல்லையில் பாங்சோ ஏரி பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைந்ததால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது மோதல் போக்கும் நீடித்தது.
லடாக் எல்லையில் பகுதியில் சீன ராணுவம் வீரர்களை குவித்து வருகிறது. அது போல் எல்லையில் ரோந்து பணியை இந்தியா மேற்கொள்வதற்கும் சீனா இடையூறு செய்கிறது. இதனால் சீன படைகளை சமாளிக்க இந்தியாவும் தன் படைகளை அனுப்பியது. இதனால் பாங்சோ ஏரி, கால்வன் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதை தணிக்க அந்த பகுதிகளில் இரு நாடுகளின் ராணுவ உயரதிகாரிகள் பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்திவிட்டனர். எனினும் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த நிலையில் நேற்றைய தினம் லடாக்கில் இந்தியாவும் சீனாவும் 9ஆவது சுற்று பேச்சுவார்த்தைகளை நேற்று நடத்தின.
இதில் படைகளை திரும்ப பெறுவதில் இரு தரப்பிலும் கருத்தொற்றுமை ஏற்படாததால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
ஜப்பானுக்கு தண்ணி காட்டும் சீனா.. இருந்தது ஒன்னே ஒன்னு அப்போ அதுவும் போச்சா!! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications