வளைகுடா போர்.. விளக்கமளித்த ஜெய்சங்கர்! விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்
டெல்லி: வளைகுடா போரில் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. இந்நிலையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கிய நிலையில், இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார். இருப்பினும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் நிலவும் சூழல் குறித்து நாடாளுமன்ற ராஜ்ய சபாவில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் விளக்கமளித்தார்.

ஜெய்சங்கர் விளக்கம்
அவர் பேசியதாவது, "வளைகுடா நாடுகளில் 1 கோடி இந்தியர்கள் வசிக்கின்றனர். பிரதமர் நிலவரங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறார். இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து, அமைச்சகங்கள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன" என்று கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தைதான் தீர்வு
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பில் நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருவதை அவர் சபை உறுப்பினர்களுக்கு விளக்கினார். பதட்டத்தைத் தணித்து, அமைதியை நிலைநாட்டுவதற்கு, பேச்சுவார்த்தையும் இராஜதந்திர அணுகுமுறையுமே அனைத்துத் தரப்பினருக்கும் உகந்த வழி என இந்திய அரசின் நிலைப்பாட்டை ஜெய்சங்கர் மீண்டும் வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சிகள் முழக்கம்
மத்திய அரசு, இந்த மோதல் தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் 5ம் தேதியே ஒரு பயண ஆலோசனையை வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இதில், அங்குள்ள இந்தியக் குடிமக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறவும், கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டனர்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் முழக்கமிட்டு சலசலப்பு ஏற்படுத்திய பின்னணியிலேயே அமைச்சரின் இந்தக் கருத்துகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்
இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பியிருந்தனர். இந்தியர்களின் பாதுகாப்பு, எரிபொருள் விலை உயர்வு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், கோரிக்கை ஏற்கப்படாததால், நாடாளுமன்ற அவைக்கு உள்ளேயும், வளாகத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தின் மகர துவாரா பகுதியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர். அவர்கள், 'வளைகுடா பற்றி எரிகிறது, எண்ணெய் நெருக்கடி. இந்தியர்கள் தவிக்கின்றனர். இந்தியாவுக்குத் தலைமை தேவை - மௌனம் வேண்டாம்' என்ற பதாகையை ஏந்தியிருந்தனர்.
-
இந்தியா – நியூசிலாந்து இறுதி போட்டி.. உலக கோப்பையை வெல்ல போவது யார்.. ஜோதிட கணிப்பு -
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில் -
ஈரானின் மரண விளையாட்டு.. சத்தமின்றி அமெரிக்காவிற்கு ‘செக்மேட்’.. சிக்கி நிலைகுலைந்த இஸ்ரேல்! -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
எதிரிகள் தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க.. அந்தர் பல்டி அடித்த ஈரான் அதிபர்! அண்டை நாடுகளுக்கு வார்னிங் -
இன்னும் ’மெயின்’ ஆயுதத்தையே எடுக்கலை.. எடுத்தா முடிஞ்சுடுவீங்க! அமெரிக்கா - இஸ்ரேலை எச்சரித்த ஈரான்! -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
நீங்கள் எதிர்பார்க்காத ஒன்று நடக்க போகுது.. காத்திருங்கள்.. புதிர் போடும் இஸ்ரேல் நெதன்யாகு.. கொடுமை -
போரால் துபாயில் உணவு பஞ்சம்? 8 நாட்களுக்கு தேவையான உணவு மட்டுமே இருக்கிறதாம்! அதிர்ச்சி தகவல் -
அடுத்த ஓரிரு மணி நேரத்தில் நடக்கப்போகும் சம்பவம்.. வார்னிங் கொடுத்த டிரம்ப்! ஈரான் கதை முடியப்போகுது -
ஈரானை அடிச்சா இந்தியாவுக்கு வலிக்கும்.. ஒரே ஒரு நல்லது மட்டும் நடந்துருக்கு! இனிமேல் தான் சிக்கலே!












Click it and Unblock the Notifications