இந்தியாவில் நடப்பு ஆண்டில் 20 பில்லியன் டாலர் அன்னிய நேரடி முதலீடுகள்... மோடி பெருமிதம்
டெல்லி: இந்தியா நடப்பு ஆண்டில் 20 பில்லியன் டாலர் மதிப்பிலான அன்னிய முதலீடுகளைப் பெற்றுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
இந்தியா, அமெரிக்கா இடையேயான நல்லுறவுக்கான அமைப்பான USISPF-ன் 3-வது தலைமைத்துவ உச்சி மாநாட்டில் இன்று பிரதமர் மோடி பேசியதாவது:
இந்த மாநாடானது புதிய சவால்களை எதிர்கொள்ளும் இந்தியா- அமெரிக்கா என்பதை மையமாக கொண்டது. இதில் இந்திய பசிபிக் பிராந்திய சிக்கல்கள், அன்னிய நேரடி முதலீடுகளை இந்தியா ஈர்த்தல் உள்ளிட்ட தலைப்புகளில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

கொரோனா பரவல் என்பது ஒவ்வொருவரிடத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நமது சுகாதார அமைப்புகள், பொருளாதார அமைப்புகள் கடுமையான பாதிப்பை உருவாக்கி உள்ளது.
தற்போதைய சூழ்நிலையானது புதிய சிந்தனைகளுக்கான களமாக இருக்கிறது. ஒவ்வொருவரிடையேயான ஒத்துழைப்பும் புரிந்துணர்வும் அவசியமானதாகவும் இருக்கிறது. இந்தியா 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு.
ஆனால் குறிப்பிட்ட அளவு வளம் கொண்டதுதான். ஆனாலும் இந்தியாவில் கொரோனா மரணங்கள் குறைவாகவே உள்ளன. இந்தியாவின் தொழில் சமூகம் குறிப்பாக சிறுதொழில் சமூகம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
கையில் எதுவுமே இல்லாத சூழ்நிலையில் கொரோனா உயிர் காப்பு கவசங்களை இந்திய சிறுதொழில்துறை சமூகம் உருவாக்கத் தொடங்கியது. தற்போது கொரோனா உயிர் காப்பு வசங்கள் உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது.
கொரோனோவின் பாதிப்பு இருந்தாலும் 130 கோடி இந்தியர்களின் லட்சியங்களுக்கும் வேட்கைகளுக்கும் அது குறுக்கே நிற்கவில்லை. இந்தியாவில் வர்த்தக சூழ்நிலையை சீரமைக்க பல்வேறு சீர்திருத்தங்களை அண்மையில் நாம் மேற்கொண்டிருக்கிறோம். உலகின் மிகப் பெரிய வீடுகள் கட்டும் திட்டத்தையும் மரபுசாரா எரிசக்தி உற்பத்தியையும் இந்தியா முன்னெடுத்திருக்கிறது. ரயில், சாலை போக்குவரத்து மேம்படுத்தப்பட்டிருக்கிறது,
வங்கிகள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறோம். உலக நாடுகளிடையேயான பரிமாற்றம் என்பது விலையின் அடிப்படையில் இருக்கக் கூடாது என்பதை கொரோனா நமக்கு பாடமாக கற்றுக் கொடுத்திருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதில் முன்னணி வகிக்கிறது. அது அமெரிக்காவானாலும் ஆப்பிரிக்காவானாலும் வளைகுடா நாடுகளானாலும் இந்தியாவை நம்புகின்றனர். நடப்பு ஆண்டில் இந்தியா 20 பில்லியன் டாலர் அன்னிய முதலீடுகளைப் பெற்றிருக்கிறது.
கூகுள், அமேசான் உள்ளிட்டவை இந்தியாவுக்கான நீண்டகால முதலீட்டுத் திட்டங்களை அறிவித்திருக்கின்றன. இந்தியாவின் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை வெளிப்படை தன்மையை ஊக்கப்படுவ்த்துவதாக உள்ளது. உலகிலேயே வரிகள் குறைந்த நாடாக இந்தியா திகழ்கிறது. புதிய தொழில்ற்சாலைகளை மானியங்கள் மூலம் ஊக்கப்படுத்தி உருவாக்கி வருகிறோம். சர்வதேச அளவில் உலக நாடுகளின் அன்னிய முதலீடு 1 சதவீதம் வீழ்ச்சியடைந்த 2019-ல் இந்தியா 20% வளர்ச்சியைப் பெற்றது.
இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.
-
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
குவைத் ஏர்போர்ட் தாக்குதல்.. அமெரிக்காவின் தவறு! ஈரான் பரபர குற்றச்சாட்டு.. மறுக்கும் டிரம்ப்! -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
கொத்தடிமை முறையை ஒழிக்க இந்தியா தவறிவிட்டதாம்.. கூடுதல் வரிக்கு காரணம் சொல்லும் டிரம்ப்! -
நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.. லெபனான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய டிரம்ப்!












Click it and Unblock the Notifications