இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,58,089 பேருக்கு கொரோனா பாதிப்பு-385 பேர் மரணம்
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,58,089 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று மட்டும் 385 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து 2 லட்சத்தை தாண்டியதாக பதிவாகி வருகிறது. இந்தியாவில் நேற்று மட்டும் 13,13,444 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

இதில் 2,58,089 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. நாட்டில் இதுவரை மொத்தம் 70.37 கோடி கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 1,51,740 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,52,37,461. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைதல் 94.27% ஆக உள்ளது.
இந்தியாவில் ஓமிக்ரான் எனும் உருமாறிய வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 8,209 ஆக உயர்ந்துள்ளது. இது முந்தைய நாளைவிட 6.02% அதிகமாகும். நாட்டில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர்- ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 16,56,341. நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 157.20 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
Recommended Video
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications