கொரோனா 4-வது அலையை நோக்கி இந்தியா? 3-வது நாளாக ஒருநாள் தொற்று பாதிப்பு 8,000-த்தை கடந்தது!
டெல்லி: இந்தியாவில் தொடர்ந்து 3-வது நாளாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 8,000-த்தை கடந்து பதிவாகி உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 10 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா 4-வது அலை உருவாகுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் ஒருநாள் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2-வது நாளாக 8,000-த்தை கடந்து பதிவாகி உள்ளது- 4 பேர் மரணம்
3-வது நாளாக நீடிப்பு
இந்தியாவில் கடந்த 2 நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 8,000-த்தை தாண்டி பதிவாகி இருந்தது. கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 8,084 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 10 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 4,592 பேர் கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பி உள்ளனர்.
ஒரே வாரத்தில் கிடுகிடு
நாட்டில் ஜனவரி மாதத்துக்குப் பின்னர் தற்போதுதான் ஒருவார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50,000ஐ நெருங்கியுள்ளது. தலைநகர் டெல்லியில் இந்த வாரத்தில் மொத்தம் 4,068 பேருக்கு புதியதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களை ஒப்பிடுகையில் 69% அதிகரிப்பாகும்.ஹரியானாவில் மட்டும் இந்த வாரம் 2029 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இது கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் 65% அதிகரிப்பாகும். உத்தரப்பிரதேசத்தில் இந்த வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,295. இது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் 32% அதிகரிப்பு ஆகும்.
இந்தியாவில் ஆக்டிவ் கேஸ்கள்
முந்தைய வாரத்தை ஒப்பிடுகையில் குஜராத்தில் புதியதாக 790 கேஸ்கள் பதிவாகி உள்ளன. மேற்கு வங்கத்தில் 663 கேஸ்களும் பஞ்சாப்பில் 250 கேஸ்களும் பதிவாகி உள்ளன. இந்த் மாநிலங்களில் கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஆக்டிவ் கேஸ்கள் அதாவது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 47,995 ஆக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் இது 3,482 அதிகரித்திருக்கிறது.
இந்தியா நிலவரம்
இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,32,30,101. இதுவரையிலான கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 5,24,771. நாட்டில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,26,57,335.R