இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,00,636 பேராக குறைந்தது - 1,74,399 பேர் மீண்டனர்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,00,636 பேராக குறைந்துள்ளது. தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும்

Subscribe to Oneindia Tamil

டெல்லி : நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் மூலம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 1,00,636 பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 1,74,399 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தினால் தினசரி பாதிப்பு 4 லட்சத்திற்கும் மேல் பதிவானது. மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. உயிரிழப்பும் அதிகரிக்கவே அந்த மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

தமிழகத்திலும் தினசரி பாதிப்பு அதிகரிக்கவே கடந்த சில வாரங்களாக ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்தியாவில் நோய் தொற்று பாதிப்பு குணமடைந்தோர் எண்ணிக்கை குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தகவல் வெளியிட்டுள்ளது.

2,89 கோடி பேர் பாதிப்பு

2,89 கோடி பேர் பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,00,636 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2,89,09,975 பேராக அதிகரித்துள்ளது.

2.71 கோடி பேர் மீண்டனர்

2.71 கோடி பேர் மீண்டனர்

கொரோனாவால் பாதிக்கப்படுவோரை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 1,74,399 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,71,59,180 பேராக உயர்ந்துள்ளது.

மரணமடைந்தவர்கள் விபரம்

மரணமடைந்தவர்கள் விபரம்

நாடு முழுவதும் மருத்துவமனைகளில் 14,01,609 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2427 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,49,186 பேராக அதிகரித்துள்ளது. இதுவரை 23,27,86,482 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனை எத்தனை கோடி

பரிசோதனை எத்தனை கோடி

ஜூன் 6ஆம் தேதி வரைக்கும் நாடு முழுவதும் 36,63,34,111 சாம்பிள்களை பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரே நாளில் 15,87,589 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+