இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1.50 லட்சத்தை தாண்டியது-24 மணிநேரத்தில் உயிரிழப்புகள் 327
டெல்லி: இந்தியாவிலும் ஒருநாள் கொரோனா பாதிப்பு கோரத்தாண்டவமாடுகிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,59,632 ஆக அதிகரித்திருக்கிறது. கொரோனாவால் நேற்று மட்டும் 327 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 3,623 ஆகவும் உயர்ந்துள்ளது.
Recommended Video
உலக நாடுகளில் கொரோனா 4-ம் அலை அதி உச்சமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா 3-வது அலை வேகமாக அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,59,632 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 327 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் நேற்று மட்டும் கொரோனா பாதிப்பில் இருந்து 40,863 பேர் மீண்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் குணமடைந்தோர் விகிதம் தற்போது 96.98 சதவீதம். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,44,53,603 என அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஆக்டிவ் கேஸ்கள்
இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 5,90,611. கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் 1.66 ஆக உள்ளது.

ஓமிக்ரான் பாதிப்பு
ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் 3,623 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, ராஜஸ்தான், குஜராத், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 27 மாநிலங்களில் உருமாறிய ஓமிக்ரான் தொற்று 3,623 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 1,409 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1009 பேருக்கும், டெல்லியில் 513 பேருக்கும், ஓமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது. டெல்லியில் 57 பேரும், மகாராஷ்டிராவில் 439 பேரும் குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் 185 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனைகள்
தினசரி பாதிப்பு விகிதம் 10.21 சதவீதம் ஆகும். வாராந்திர பாதிப்பு விகிதம் 6.77 சதவீதம் ஆகும். இதுவரை மொத்தம் 69 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பூசி
தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 151.58 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை, 155.95 கோடிக்கும் மேற்பட்ட (1,55,95,35,295) தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசு மூலம் இலவசமாகவும் மற்றும் மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமும் வழங்கப்பட்டுள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 17.74 கோடிக்கும் மேற்பட்ட (17,74,25,761) தடுப்பூசி டோஸ்கள் இன்னமும் இருப்பில் உள்ளன.
-
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications