இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.6 லட்சமாக குறைவு- ஒருநாள் உயிரிழப்பு 4,340 ஆக அதிகரிப்பு
டெல்லி: இந்தியாவில் பல மாநிலங்களில் லாக்டவுன் கடுமையாக அமல்படுத்தபப்ட்டு வரும் நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு சற்று குறைய தொடங்கி உள்ளன. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,63,045 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதேநேரத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 4,340 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
செம ஷாக்.. இந்தாண்டு ஏற்பட்ட கொரோனா உயிரிழப்புகளில்.. 93% கடைசி 3 மாதங்களில் ஏற்பட்டவை
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,42,44,556. உலகின் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 34,03,206. உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 14,29,11,035.
இந்தியா 2.6 லட்சம் பேருக்கு பாதிப்பு
உலக நாடுகளில் ஒருநாள் பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இருப்பினும் இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு கடந்த 2 நாட்களாக சற்று குறைய தொடங்கியுள்ளது. இந்தியாவில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,63,045 ஆக இருந்தது.
4,340 பேர் மரணம்
ஆனால் கொரோனா மரணஙக்ள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 4,340 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,52,27,970. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2,15,90,003. இந்தியாவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 2,78,751.
மகா., தமிழகம்
இந்தியாவில் தற்போதைய நிலையில் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 33,59,216. மாநிலங்களில் அதிக பாதிப்பு நீடித்து வந்த மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கியது. மகாராஷ்டிராவில் திங்கள்கிழமையன்று 26,616 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதேநேரத்தில் மகாரஷ்டிராவில் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,000-த்தை தொட்டுவிட்டது.
கர்நாடகாவில் 476 பேர் பலி
கர்நாடகாவில் நேற்று மட்டும் 38,603 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இம்மாநிலத்தில் ஒரே நாளில் 476 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தமிழகத்தில் திங்களன்று 33,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தமிழகத்தில் 24 மணிநேரத்தில் 335 பேர் கொரோனாவால் மரணம் அடைந்தனர். டெல்லியில் ஒரே நாளில் 340 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.