இந்தியாவின் ஒருநாள் பாதிப்பு 50,848 ஆக குறைந்தது- 24 மணிநேரத்தில் 1,358 பேர் மரணம்
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 50,848 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 1,358 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.
உலக நாடுகளில் கொரோனா 2-வது அலையால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தியாவில் டெல்டா என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
தற்போது டெல்டா பிளஸ் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தாக்குதலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று மட்டும் 50,848 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,00,28,709 ஆக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1,358 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இந்தியாவில் மொத்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 3,90, 660.
இந்தியாவில் நேற்று மட்டும் 68,817 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்தியாவில் இதுவரை கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 2,89,94,855. இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6,43,194.