2027-ல் மக்கள் தொகை + ஜாதிவாரி கணக்கெடுப்பு.. அறிவிக்கையை வெளியிட்டது மத்திய அரசு
டெல்லி: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் 2027 மார்ச் 1 ஆம் தேதியை மக்கள் தொகை கணக்கெடுப்பு தேதியாக அறிவித்து மத்திய அரசு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதி வாரி கணக்கெடுப்பும் நடைபெற உள்ளது.
இந்தியாவில், மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதற்கு முன்பாக கடந்த , 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு, இரு கட்டங்களாக நடத்தப்பட்டது. இதன்படி , 2021-ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

ஆனால், கொரோனா தொற்று காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு 5 ஆண்டுகள் ஆகியும் அப்பணி தொடங்கப்படாததால், எதிர்க்கட்சிகள் மத்திய அரசை விமர்சித்து வந்தன. இதற்கிடையே, கடந்த ஏப்ரல் 30-ம் தேதி, பிரதமர் மோடி தலைமையில் நடந்த அரசியல் விவகாரங்களுக்கான மத்திய கேபினட் குழு கூட்டத்தில், சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடைபெறும் என்பது குறித்து, கடந்த 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதன்படி, சாதிவாரி கணக்கெடுப்புடன், 2027-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு இரு கட்டங்களாக நடத்தப்படும்.
முதல்கட்டமாக, யூனியன் பிரதேசங்களான லடாக், காஷ்மீர் மற்றும் இமாசலபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் 2026-ம் ஆண்டு அக்டோபர் 1-ந் தேதியை அடிப்படை நாளாக கொண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். அடுத்தகட்டமாக , நாட்டின் ஏனைய பகுதிகளில், 2027-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதியை அடிப்படை நாளாக கொண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படும்" என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அன்றைய தினமே, கணக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பாணையை, மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டம்-1948-ன் 3-வது பிரிவின்படி, வருகிற 16-ந் தேதி அரசிதழில் வெளியிடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், ஏற்கனவே எடுத்த முடிவின் படி, மக்கள் தொகை நடத்துவதற்காக அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் இதழில் இந்த அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. இந்த அறிவிக்கையின் படி நாடு முழுவதும் மக்கள் தொகை 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது என்பதே இதன் சாராம்சம் ஆகும்.
-
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
கைக்கு வரும் சம்பளம் குறைகிறதா? புதிய தொழிலாளர் சட்டம் அமலுக்கு வந்தது.. என்னென்ன மாறும்? -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications