அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்.. கையெழுத்தாவது எப்போது? வெளியான முக்கிய தகவல்!
டெல்லி: இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்த ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகிறது? எப்போது நடைமுறைக்கு வருகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மார்ச் மாத நடுப்பகுதியில் கையெழுத்தாகும் என வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின்படி, அமெரிக்கா பரஸ்பர வரிகளை 18% ஆகக் குறைக்கும். அதேசமயம், இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தி, அமெரிக்காவிலிருந்து $500 பில்லியன் மதிப்பிலான எரிசக்தி மற்றும் தொழில்நுட்பப் பொருட்களை வாங்க இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது.

அடுத்த 5 ஆண்டுகளில், அமெரிக்காவிடமிருந்து $500 பில்லியன் மதிப்பில் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாய பொருட்கள் மற்றும் விமான உதிரி பாகங்களை இந்தியா வாங்கும். இந்தியா வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் நாடு. மட்டுமல்லாது இந்தியாவின் கிராமப்புறங்கள் வேளாண் தொழிலை நம்பிதான் இருக்கின்றன. இப்படி இருக்கையில் அமெரிக்கா பொருட்கள் இந்திய சந்தையில் திறந்துவிடப்படும் என்றால், இங்குள்ள விவசாயிகளின் நிலை என்ன? என கேள்வி எழுந்தது.
இதற்கு விளக்கமளித்துள்ள மத்திய அரசு, பால், மீன்வளத் துறைகள் மற்றும் விவசாயிகள் அமெரிக்க ஏற்றுமதியிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளன என தெரிவித்திருக்கிறது.
என்னதான் மத்திய அரசு உறுதியாக கூறியிருந்தாலும், நாடாளுமன்றத்தில் இந்த ஒப்பந்தம் குறித்து சர்ச்சை வெடித்தது. ரஷ்யா உடனான உறவு மற்றும் வேளாண் பொருட்கள் இறக்குமதி குறித்து அரசு நாடாளுமன்றத்தில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியிருந்தன. மறுபுறம் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவன துறை மீதான வரியை குறைத்திருப்பதன் மூலம் இந்த துறையில் ஏற்றுமதி அதிகரிக்கும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.
இந்த ஒப்பந்தம் மார்ச் மாதம் நடுப்பகுதியில் கையெழுத்தாகும் என்றும், பின்னர் அமலுக்கு வரும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இருப்பினும் இந்திய வேளாண் துறையை அமெரிக்கா காலி செய்ய இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications