2027 ல்.. இந்தியா தான் நம்பர் ஒன் ஆக இருக்கும்.. மக்கள் தொகையில்.. ஐ.நா. தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவின் மக்கள் தொகையானது வரும் 2027-ஆம் ஆண்டிற்குள் சீனாவை முந்தி, உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் என ஐ.நா ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐ.நா.சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது, உலக மக்கள் தொகை தற்போது 770 கோடியாக உள்ளது. 2050 ஆம் ஆண்டில், மேலும் 200 கோடி அதிகரிக்கும். இன்னும் 8 ஆண்டுகளில், அதாவது, 2027-ல் உலக மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தை பிடித்து விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

India will top the world population By 2027, UN Study

உலக மக்கள் தொகை எண்ணிக்கையில் தற்போது சீனாவுக்கு அடுத்தப்படியாக, இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது. 2019ஆம் ஆண்டிலிருந்து 2050ஆம் ஆண்டு வரை, உலக மக்கள் தொகை அதிகரிக்க இருக்கும் எண்ணிக்கையில் பாதி, இந்தியா, நைஜிரியா, பாகிஸ்தான், காங்கோ, எத்தியோபியா, டான்சானியா, இந்தோனேஷியா, எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகிய 9 நாடுகளாக இருக்கும்

2050-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள் தொகை 273 கோடியாக உயர்ந்து விடும். நைஜீரியா நாட்டின் மக்கள் தொகை 200 கோடியாக அதிகரித்து விடும். இந்தியாவிலும் நைஜீரியாவிலும் பெண்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், இந்த இரு நாடுகளிலும் அடுத்த 30 ஆண்டுகளில் மக்கள் தொகை அதிகரிப்பது, மிக, மிக அதிக அளவில் இருக்கும்.

அதே சமயம், மக்கள் தொகை அதிகரிக்கும் நாடுகளில், குழந்தை இறப்பு, பிரசவகால இறப்பு, சண்டைகள், ஹெச்.ஐ.வி போன்ற கொடிய நோய்கள் ஆகியவை ஆயுள் காலம் குறைவதற்கு காரணமாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+