Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1971 ஆம் ஆண்டு போருக்கு பின் இதுதான் முதல் முறை.. பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கிய முப்படைகள்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக 1971 ஆம் ஆண்டு போருக்கு பிறகு இந்திய ராணுவம் முப்படைகளை களம் இறக்கியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால் கொதித்து போயிருந்த இந்தியா, இந்த தாக்குதலுக்கு பின்னால் இருந்த பயங்கராவதிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தது. பயங்கரவாத முகாம்களை குறிவைத்து பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தக்க தருணம் பார்த்து காத்துக்கொண்டு இருந்த நிலையில், நள்ளிரவு 1.44 மணிக்கு இந்திய ராணுவம் தனது அதிரடியை தொடங்கியது.

indian-army-deployed-all-three-forces-against-pakistan-for-the-first-time-since-1971

54 ஆண்டுகளுக்கு பிறகு

ஏவுகணைகள் மூலமாக இந்திய ராணுவம் அதிரடியாக நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் உள்ள 9 இடங்கள் குறிவைக்கப்பட்டன. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியாவின் முப்படைகளும் இணைந்து இந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளன.

1971 ஆம் ஆண்டுக்கு பிறகு அதாவது 54 ஆண்டுகளுக்கு பின் ராணுவம், விமானப்படை, கடற்படை என மூன்று படைகளும் ஒருங்கிணைந்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும். இந்திய மண்ணிலிருந்தே இந்த தாக்குதல்களை நடத்தியிருப்பதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

சூசைட் டிரோன்கள்

பாகிஸ்தான் உள்ளே இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய போது, இந்திய போர் விமானங்கள் எல்லையில் அரணாக பறந்துள்ளன. இந்திய ஏவுகணைகள் உள்ளே சென்ற போது பாகிஸ்தான் உடனே பதிலடி கொடுத்தால் அதை எதிர்கொள்ளும் விதமாக விமானப்படை தயார் நிலையில் இருந்துள்ளது.

இந்தியாவிடம் நாகஸ்த்ரா - 1 என்ற சூசைட் டிரோன்கள் உள்ளது. இதை இன்றைய தாக்குதலுக்கு இந்தியா பயன்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியாவின் கடற் பகுதிகளில் இருந்து கடற்படை சார்பாக தாக்குதலுக்கு பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

ஆபரேஷன் சிந்தூர்

* இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் அதிரடி நடவடிக்கையை தொடங்கியது
* நள்ளிரவு 1.44 மணிக்கு இந்த தாக்குதலை இந்திய ராணுவம் மேற்கோண்டது
* இந்த நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.

* ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்படும் பெரும்பாலான தாக்குதல்கள் இங்கிருந்துதான் திட்டமிடப்படுவதாக சொல்லப்படுகிறது.
* Precision strike - தாக்குதலில் இந்தியாவின் முப்படைகளும் ஒருங்கிணைந்து ஈடுபட்டுள்ளன.

லாகூரில் அவசர நிலை

இந்தியா நடத்திய பதிலடி தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் லாகூரில் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் ராணுவ தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பதற்றம் அதிகரித்துள்ளது. பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது தொடர்பாக அமெரிக்கா, ரஷ்யா, உள்ளிட்ட நாடுகளிடம் இந்தியா எடுத்துரைத்துள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பாவின் கிளை அமைப்பான ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட் அமைப்பு பொறுப்பு ஏற்று இருந்தது. எனவே இந்த பயங்கரவாத முகாம்கள் இருக்கும் இடத்தை டார்கெட் செய்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

விமானப்படை விமானங்கள் ஒத்திகை

பாகிஸ்தான் எல்லை அருகே இந்திய விமானப்படை விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன. ராஜஸ்தானில் பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள விமானப்படை விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டு இருக்கின்றன. பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் அறிவித்து இருப்பதால் எல்லையில் நிலைமையை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

பாகிஸ்தான் பதிலடி கொடுத்தால் உடனடியாக திருப்பி அடிக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது. இத்தகைய சூழலில் தான் விமானப்படை விமானங்கள் எல்லையில் ஒத்திகையில் ஈடுபட்டு இருக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+