இந்தியாவில் சமூகப் பரவலாக மாறுகிறது கொரோனா - இந்திய மருத்துவர் சங்கம் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு சமூகப் பரவலாக மாறிவருவதாக என்று இந்திய மருத்துவர் சங்கத்தின் மருத்துவமனை வாரியத் தலைவர் டாக்டர் வி.கே. மோங்கா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Recommended Video

    Corona இந்தியாவில் Stage-3 நிலையை எட்டிவிட்டது - IMA பரபரப்பு தகவல்

    உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா 3-வது இடத்தில் இருந்து வருகிறது. இந்தியாவில் 1077618 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 26816 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

    Indian Medical Association warns over Community spread of Coronavirus

    இந்தியாவில் அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இந்த நிலையில் இந்திய மருத்துவர் சங்கத்தின் மருத்துவமனை வாரிய தலைவர் டாக்டர் விகே மோங்கா கூறியிருப்பதாவது:

    இந்தியாவில் நாள்தோறும் 30,000 பேர் கொரோனாவால் பாதிப்படைந்து வருகின்றனர். இது மிக மிக மோசமான நிலைமையாகும். தற்போது கிராமப்புறங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. கிராமங்கள் கொரோனா பாதிப்பு மண்டலங்களாக மாறினால் மீள்வது சிரமமாகிவிடும்.

    இது அபாயகரமான எச்சரிக்கை. கொரோனா வைரஸ் தாக்கம் என்பது சமூகப் பரவலாக மாறி இருக்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது. இவ்வாறு வி.கே. மோங்கா கூறியுள்ளார்.

    கொரோனா பாதிப்பு சமூகப் பரவலாக மாறி இருப்பதாக கேரளாவின் 2 கடலோர பகுதிகளை முன்வைத்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் சுட்டிக் காட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+