அவசரப்படாதீங்க மக்களே.. பெட்ரோல் - டீசல் தட்டுப்பாடு இல்லை.. இந்தியன் ஆயில் முக்கிய அறிவிப்பு
டெல்லி: ஈரான் போரால் நம் நாட்டுக்கான கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வரும் என பரவும் தகவலால் பொதுமக்கள் அவசர அவசரமாக சென்னை உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் தான் இந்தியன் ஆயில் நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது: "உங்களின் ஒவ்வொரு நகர்விலும் நாங்கள் இருக்கிறோம். நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நடத்தும் அனைத்து பல்க்குகளும் வழக்கமான முறையில் செயல்படுகின்றன.
பெட்ரோல், டீசல் மற்றும் பிற பெட்ரோலிய பொருட்கள் போதுமான அளவுக்கு இருப்பு உள்ளது. எரிபொருள் விநியோக செயல்பாடுகள் நாடு முழுவதும் சீராக நடைபெறுகின்றன. வாடிக்கையாளர்கள் வதந்திகளை புறக்கணித்து பங்க்குகளில் தேவையற்ற அவசரத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications