வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்தேன்.. வீண் போகல.. இன்போசிஸ் நாராயண மூர்த்தி மீண்டும் பரபர பேச்சு
டெல்லி: சமீபத்தில் இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று பேசிய கருத்து விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், தற்போது தான் 85-90 மணி நேரம் வேலை செய்ததாக நாராயண மூர்த்தி கூறியுள்ளார்.
பெரும் பணக்காரரும் இன்போசிஸ் இணை நிறுவனருமான நாராயண மூர்த்தி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று தொழில் சார்ந்த விஷயங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ‛தி ரெக்கார்டு' எனும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் இந்திய பொருளாதாரம் குறித்தும், இளைஞர்கள் குறித்தும் கூறிய கருத்து கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தது.

நாரயண மூர்த்தி கூறுகையில், “இந்தியாவின் உற்பத்தி திறன் மிகக்குறைவாக உள்ளது. அரசு துறைகளில் உள்ள ஊழல்களை குறைக்க நடவடிக்கை, முயற்சிக்க வேண்டும் . நாட்டுக்கான எனது கோரிக்கை என்னவென்றால் இளைஞர்கள் கடினமாக உழைக்க வேண்டும். இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். அடுத்த 20 முதல் 50 ஆண்டுகளுக்கு இளைஞர்கள் தினமும் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்" என கூறியிருந்தார்.
நாராயண மூர்த்தியின் இந்த கருத்துக்கு பலரும் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். தொழிலாளர் அமைப்புகளும் கடும் ஆட்சேபம் தெரிவித்தன. கடுமையான போராட்டங்களுக்கு பிறகே 8 மணி நேரம் என்பது சட்டமாக்கப்பட்டுள்ளது. தற்போதும் பல நிறுவனங்கள் தினமும் 8 மணி நேரத்துக்கும் அதிகமான வேலை வாங்கி வருகின்றன. இத்தகைய சூழலில் தினமும் 12 மணி நேரம் இளைஞர்கள் வேலை செய்ய வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என பலரும் விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில், இன்போசிஸ் தொடங்கிய புதிதில் வாரத்திற்கு 85 முதல் 90 மணி நேரத்திற்கும் மேலாக தான் உழைத்ததாக நாராயண மூர்த்தி கூறியுள்ளார். இது தொடர்பாக நாராயண மூர்த்தி கூறுகையில், “நான் காலை 6.20 மணிக்கு அலுவலகத்தில் இருப்பதையும் இரவு 8.30 மணிக்கு அலுவலகத்தில் இருந்து கிளம்பி செல்வதையும் வழக்கமாக கொண்டு இருந்தேன். வாரத்திற்கு ஆறு நாட்களும் வேலை செய்தேன்.
செழிப்பாக இருக்கும் ஒவ்வொரு நாடும் கடின உழைப்பு மூலமே அதை சாத்தியப்படுத்தியது என நான் அறிவேன். வறுமையில் இருந்து தப்பிக்க ஒரே வழி கடின உழைப்புதான் என்று எனது பெற்றோர்கள் எனக்கு கற்று கொடுத்தனர். எனது 40 வருடத்திற்கு மேலான தொழில்முறை வாழ்க்கையில் வாரத்திற்கு 70 மணி நேரத்திற்கும் மேல் நான் உழைத்துள்ளேன் . 1994 ஆம் ஆண்டு வரை வாரத்திற்கு 85 முதல் 90 மணி நேரம் வேலை செய்தேன். அது வீண் போகவில்லை” என்றார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications