வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்தேன்.. வீண் போகல.. இன்போசிஸ் நாராயண மூர்த்தி மீண்டும் பரபர பேச்சு
டெல்லி: சமீபத்தில் இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று பேசிய கருத்து விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், தற்போது தான் 85-90 மணி நேரம் வேலை செய்ததாக நாராயண மூர்த்தி கூறியுள்ளார்.
பெரும் பணக்காரரும் இன்போசிஸ் இணை நிறுவனருமான நாராயண மூர்த்தி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று தொழில் சார்ந்த விஷயங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ‛தி ரெக்கார்டு' எனும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் இந்திய பொருளாதாரம் குறித்தும், இளைஞர்கள் குறித்தும் கூறிய கருத்து கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தது.

நாரயண மூர்த்தி கூறுகையில், “இந்தியாவின் உற்பத்தி திறன் மிகக்குறைவாக உள்ளது. அரசு துறைகளில் உள்ள ஊழல்களை குறைக்க நடவடிக்கை, முயற்சிக்க வேண்டும் . நாட்டுக்கான எனது கோரிக்கை என்னவென்றால் இளைஞர்கள் கடினமாக உழைக்க வேண்டும். இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். அடுத்த 20 முதல் 50 ஆண்டுகளுக்கு இளைஞர்கள் தினமும் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்" என கூறியிருந்தார்.
நாராயண மூர்த்தியின் இந்த கருத்துக்கு பலரும் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். தொழிலாளர் அமைப்புகளும் கடும் ஆட்சேபம் தெரிவித்தன. கடுமையான போராட்டங்களுக்கு பிறகே 8 மணி நேரம் என்பது சட்டமாக்கப்பட்டுள்ளது. தற்போதும் பல நிறுவனங்கள் தினமும் 8 மணி நேரத்துக்கும் அதிகமான வேலை வாங்கி வருகின்றன. இத்தகைய சூழலில் தினமும் 12 மணி நேரம் இளைஞர்கள் வேலை செய்ய வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என பலரும் விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில், இன்போசிஸ் தொடங்கிய புதிதில் வாரத்திற்கு 85 முதல் 90 மணி நேரத்திற்கும் மேலாக தான் உழைத்ததாக நாராயண மூர்த்தி கூறியுள்ளார். இது தொடர்பாக நாராயண மூர்த்தி கூறுகையில், “நான் காலை 6.20 மணிக்கு அலுவலகத்தில் இருப்பதையும் இரவு 8.30 மணிக்கு அலுவலகத்தில் இருந்து கிளம்பி செல்வதையும் வழக்கமாக கொண்டு இருந்தேன். வாரத்திற்கு ஆறு நாட்களும் வேலை செய்தேன்.
செழிப்பாக இருக்கும் ஒவ்வொரு நாடும் கடின உழைப்பு மூலமே அதை சாத்தியப்படுத்தியது என நான் அறிவேன். வறுமையில் இருந்து தப்பிக்க ஒரே வழி கடின உழைப்புதான் என்று எனது பெற்றோர்கள் எனக்கு கற்று கொடுத்தனர். எனது 40 வருடத்திற்கு மேலான தொழில்முறை வாழ்க்கையில் வாரத்திற்கு 70 மணி நேரத்திற்கும் மேல் நான் உழைத்துள்ளேன் . 1994 ஆம் ஆண்டு வரை வாரத்திற்கு 85 முதல் 90 மணி நேரம் வேலை செய்தேன். அது வீண் போகவில்லை” என்றார்.
-
RRB Group D: இந்தியன் ரயில்வேயில் 22,195 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 10 ஆம் வகுப்பு தகுதி தான் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
IT JOBS: நாளை மதியம் இண்டர்வியூ.. HCL வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. சென்னையில் பணி -
ஐடிஐபி வங்கியில் வேலை.. 1,300 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! மாதம் 50 ஆயிரம் சம்பளம்! -
அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை.. தமிழக அரசு வெளியிட்ட குட்நியூஸ்.. அரசாணையை கவனித்தீர்களா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம்












Click it and Unblock the Notifications