மாலத்தீவு:இந்தியாவுக்கு இஸ்ரேல் முதல் ஆதரவு- லட்சத்தீவில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் அறிவிப்பு!
டெல்லி: மாலத்தீவுகள் விவகாரத்தில் இந்தியாவுக்கு இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ளது. லட்சத்தீவுகளில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தவும் இஸ்ரேல் முன்வந்துள்ளது.
மாலத்தீவு அதிபராக முய்சு பதவியேற்றது முதலே இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை தீவிரமாக்கி வருகிறார். மாலத்தீவில் இருந்து இந்திய வீரர்களை வெளியேற்றினார் முய்சு. இந்தியாவுக்கு எதிராக சீனாவுடன் கை கோர்த்து நிற்கிறது மாலத்தீவு. முய்சுக்கு முன்னர் மாலத்தீவு அதிபராக இப்ராஹிம் முகமது சோலி பதவி வகித்தார். அவர் இந்தியாவை முழுமையாக ஆதரித்தவர். இந்தியாவுக்கு முன்னுரிமை என்ற கோட்பாட்டை வலியுறுத்தி செயல்படுத்தியவர் முகமது சோலி. ஆனால் இந்தியாவை வெளியேற்றுவோம் என்ற முழக்கத்தை முன்வைத்த அதிபர் முய்சுக்கு அதிபர் தேர்தலில் வெற்றியை கொடுத்தனர் மாலத்தீவு மக்கள். இத்தனைக்கும் மாலத்தீவுக்கு குடிநீர் பிரச்சனை முதல் பாதுகாப்பு வரை இந்தியாதான் அரணாக இருந்து வந்தது.

இந்த பின்னணியில் பிரதமர் மோடியின் லட்சத்தீவுகள் பயணத்தை மாலத்தீவு அமைச்சர்கள் சிலர் விமர்சித்தது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதனையடுத்து 3 அமைச்சர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் இந்தியாவுக்கான மாலத்தீவு தூதரை நேரில் அழைத்தும் மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது. மாலத்தீவு நாட்டில் இந்தியாவுக்கு ஆதரவான குரல்கள் வலுத்து வருகின்றன. மாலத்தீவு அதிபர் முய்சுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
தற்போது மாலத்தீவுகள் விவகாரத்தில் இந்தியாவுக்கு இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த முதல் வெளிநாடு இஸ்ரே. டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை லட்சத்தீவில் செயல்படுத்த இஸ்ரேல் தயாராக இருக்கிறது எனவும் அறிவித்துள்ளார். அத்துடன் லட்சத்தீவின் சுற்றுலாவை ஊக்கப்படுத்தும் வகையில் லட்சத்தீவுகள் படங்களை பகிர்ந்தும் இருக்கிறார் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர்.
கடந்த 2017-ம் ஆண்டு பிரதமர் மோடி இஸ்ரேல் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களை பிரதமர் மோடி அங்கு பார்வையிட்டார். அதனடிப்படையில் தற்போது லட்சத்தீவில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரேல் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்












Click it and Unblock the Notifications