சுத்த பொய்.. ராகுல் மீது குற்றஞ்சாட்டிய ஸ்மிரிதி இராணி.. கடிந்து கொண்ட தேர்தல் ஆணையம்!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக மத்திய பாஜக அமைச்சர் ஸ்மிரிதி இராணி அளித்த புகாருக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்து இருக்கிறது.
டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக மத்திய பாஜக அமைச்சர் ஸ்மிரிதி இராணி அளித்த புகாருக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்து இருக்கிறது.
நேற்று நாடு முழுக்க ஐந்தாவது கட்ட லோக்சபா தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 7 மாநிலங்களில் தேர்தல் நடந்தது. 51 தொகுதிகளில் இந்த தேர்தல் நடந்தது.

இந்த தேர்தல் அமேதி, ரேபரேலி ஆகிய முக்கிய தொகுதிகளிலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக அமைச்சர் ஸ்மிரிதி இராணி போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் நேற்று அமேதியில் வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்த ஸ்மிரிதி இராணி, அமேதி தேர்தலில் முறைகேடு நடக்கிறது. இங்கு வாக்குசாவடிகளை கைப்பற்ற நினைக்கிறார்கள். இதற்காக ராகுல் காந்தியின் ஆட்கள் செயல்பட்டு வருகிறார்கள் என்று கூறினார்.
அப்படி கூறியதோடு, இது தொடர்பாக மூதாட்டி ஒருவர் வெளியிட்ட வீடியோவையும் இணையத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. அதேபோல் தேர்தல் ஆணையத்திடம் டிவிட்டர் மூலம் புகார் அளித்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக மத்திய பாஜக அமைச்சர் ஸ்மிரிதி இராணி அளித்த புகாருக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து உத்தர பிரதேச மாநில தேர்தல் அதிகாரி பதில் அளித்துள்ளார்.
அதில், இந்த புகார் பொய்யானது. இதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அங்கு தேர்தல் மிக மிக பாதுகாப்பாக நடைபெற்றது. இந்த வீடியோ பொய்யானது, என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் ராகுல் காந்திக்கு எதிரான புகாரையும் தள்ளுபடி செய்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications