இதைப் பார்த்து நீங்க வெட்கப்படணும் மிஸ்டர் சென்ராயன்!
Recommended Video
டெல்லி: தேர்தல் ஆணையம் எந்த அளவுக்கு இந்த தேர்தலை ஜனநாயக ரீதியாக, பலத்த பாதுகாப்புடன், நேர்மையுடன் நடத்துகிறது என்பதற்கு எத்தனையோ சாட்சிகளை மக்களும், கட்சிகளும் காட்டி விட்டனர், பார்த்தும் விட்டனர். அதில் இன்னொரு பதமாக இந்த வீடியோ வந்துள்ளது.
இது வடக்கே ஏதோ ஒரு ஊர் போல தெரிகிறது. வாக்குச் சாவடிக்குள் வரிசையாக மூதாட்டிகள் வாக்களிக்க வருகின்றனர். அவர்களுக்கு ஒரு பெண் உதவுகிறார். உதவுகிறார் என்றால் அவரே வாக்கு செலுத்துகிறார். அந்தப் பாட்டிகள் சொல்லும் சின்னத்தில் அவர் வாக்களிப்பது போல தெரியவில்லை.

பட்டவர்த்தனமாக இந்த அத்துமீறல் நடக்கிறது. ஆனால் வாக்குச் சாவடியில் யாரும் வாயே திறக்கவில்லை. கம்மென்று இருக்கின்றனர். அந்தப் பெண்ணும் சரமாரியாக வருகிற பாட்டிகளுக்கெல்லாம் சேர்த்து இவரே வாக்களித்துக் கொண்டுள்ளார்.
Another achievement #ElectionCommission. Shocking to say the least. pic.twitter.com/yT4k9yEtMG
— Vinod Sharma (@VinodSharmaView) May 15, 2019
வாழ்க ஜனநாயகம், வளர்க தேர்தல் ஆணையம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது இதைப் பார்த்தால். 100 சதவீத வாக்குப் பதிவு என்பதெல்லாம் இப்படிப்பட்ட காட்சிகள் தொடர்ந்தால் கனவில் கூட சாத்தியம் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஜனநாயகக் கடமை என்று மை பதித்த விரல் தூக்கி செல்பி எடுத்து பெருமைப்பட்டுக் கொண்ட இளைஞர்கள் எல்லாம் இதுபோன்ற அத்துமீறல் காட்சிகளைப் பார்த்து மனம் வெதும்பித்தான் போவார்கள்.
தேர்தல் ஆணையம் இன்னும் தன்னை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.












Click it and Unblock the Notifications