ம.பி., ராஜஸ்தான் எம்எல்ஏக்களுக்கு காத்து கிடக்கும் ஜாக்பாட்.. குஷியில் வெற்றியாளர்கள்!
டெல்லி: மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் அடுத்து யாருடைய ஆட்சி என்பதில் தெளிவு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் அங்கு வெற்றி பெற்ற எம்எல்ஏக்களை இழுக்கும் குதிரை பேரம் சூடு பிடிக்கவுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸும், பாஜகவும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றன. ராஜஸ்தானில் காங்கிரஸ் தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
இதன் காரணமாக சுயேச்சைகள், பிற கட்சி எம்.எல்.ஏக்களுக்கு பெரிய கிராக்கி ஏற்பட்டுள்ளது. அவர்களை வளைக்க பாஜக முயற்சிக்கும் என்பதாலும், காங்கிரஸும் வளைக்கப் பார்க்கும் என்பதாலும் பணம் கோடிக்கணக்கில் விளையாடும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

பலம் இல்லை
மத்தியப் பிரதேசத்தைப் பொறுத்தவரை இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றன. அங்கு ஆட்சியமைக்க தேவையான பலம் 116 ஆகும். ஆனால் இதுவரை பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் அந்த பலம் கிடைக்கவில்லை.

திடீர் கிராக்கி
இரு மாநிலங்களிலும் சுயேச்சைகள் கணிசமாக வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் தவிர பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட குட்டிக் கட்சிகளும் ஓரளவு வெற்றி பெற்றுள்ளன. இவர்களுக்குத்தான் இப்போது திடீர் கிராக்கி கூடியுள்ளது.

தெளிவில்லை
ராஜஸ்தானைப் பொறுத்தவரை அங்கும் யாருக்கும் தனிப் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இதனால் அங்கும் இழுபறி நிலவுகிறது. யார் ஆட்சியமைக்கப் போவது என்பதும் தெளிவில்லை.

காங்கிரஸ் ஆட்சி
பாஜகவைப் பொறுத்தவரை ஆட்சியமைக்கும் சாத்தியம் ம.பியில் உள்ளது. அதாவது தனக்குத் தேவையான எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியமைக்க அது முயலலாம். அதேசமயம், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த சாத்தியம் அதிகம் உள்ளது.

கிராக்கி
பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளுமே ஆட்சியமைக்க முயலும் என்பதாலும், அதிக அளவில் பணத்தை வாரியிறைக்க இரு கட்சிகளும முயலும் என்பதாலும் இந்த இரு மாநிலங்களிலும் வெற்றி பெற்றுள்ள சுயேச்சை உள்ளிட்ட எம்.எல்ஏக்களுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. குதிரை பேரம் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications