ஜல் ஜீவன் திட்ட முறைகேடு.. மோடி கடும் கோபம்.. குஜராத், தமிழ்நாடு உள்பட ஏழு மாநிலங்களுக்கு அபராதம்
டெல்லி: பிரதமர் மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்றான 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தில் மிகப்பெரிய அளவில் நாடு முழுவதும் முறைகேடுகள் நடந்துள்ளதை மத்திய அரசு கண்டுபிடித்துள்ளது. இந்த விவகாரத்தில், தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.129 கோடி அபராதம் விதித்து அதிரடியாகஉத்தரவிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கும் 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தில், நிதி முறைகேடுகள் மற்றும் தரக்குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.
இல்லம்தோறும் குடிநீர் இணைப்பு : திட்டம் தொடங்கியது எப்படி?
இந்தியக் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்தமான குழாய் நீர் இணைப்பை வழங்குவதே ஜல் ஜீவன் மிஷன் (Jal Jeevan Mission) திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். 'இல்லம்தோறும் குடிநீர் இணைப்பு' என்ற முழக்கத்துடன், பிரதமர் நரேந்திர மோடி இத்திட்டத்தை 2019 ஆகஸ்ட் 15 அன்று தொடங்கி வைத்தார்.

ஆரம்பத்தில் இத்திட்டத்தை 2024-க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பல வீடுகள், பல கிராமங்களுக்கு திட்டம் போய் சேர வேண்டியதிருந்ததால், அதன் காலக்கெடு 2028 வரை நீட்டிக்கப்பட்டது. இது கிராமப்புற இந்தியாவின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட மாபெரும் திட்டமாக இது பார்க்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிதியளிக்கும் இந்தத் திட்டத்திற்கு, பிரதமரின் நேரடி கவனம் செலுத்தி வந்தார். இந்த திட்டத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் தரக்கட்டுப்பாடு மிக முக்கியம் என்று மத்திய அரசு விரும்பியது.
முறைகேடு நடந்தது எப்படி? பிரதமர் ஏன் கோபமானார்
இந்தியா முழுவதும் இத்திட்டத்தின் பணிகள் தீவிரமாக நடந்தபோது, மத்திய அரசின் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்தனர். அப்போதுதான் சில மாநிலங்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடுகள் மற்றும் தர மீறல்கள் நடந்திருப்பதை கண்டுபிடித்தனர். குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்குவதில் நிதி துஷ்பிரயோகம், திட்டச் செயல்பாட்டு விதிகளில் மீறல், மேலும் முக்கியமாக, போடப்பட்ட குழாய்களின் தரத்தில் குறைபாடு ஆகிய பிரச்சனைகள் அப்படமாக மத்திய அரசின் கவனத்திற்கே சென்றது,
இந்த முறைகேடுகள் குறித்த விவரங்கள் பிரதமர் நரேந்திர மோடியின் நேரடி கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டபோது, அவர் கடும் கோபம் அடைந்தார். ஏனெனில், மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீர்த் திட்டத்தில், நிதி அல்லது தரத்தில் எந்தவிதமான மீறல்களையும் சகித்துக்கொள்ள முடியாது என்பதில் அவர் உறுதி தெரிவித்தார்.
குஜராத், தமிழ்நாடு உள்பட ஏழு மாநிலங்களுக்கு அபராதம் விதிப்பு
பிரதமர் மோடியின் உத்தரவைத் தொடர்ந்து, முறைகேட்டில் ஈடுபட்ட குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, திரிபுரா, அஸ்ஸாம், மற்றும் ராஜஸ்தான் ஆகிய 7 மாநிலங்களுக்கு மொத்தமாக ரூ.129 கோடியே 67 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதில், அதிகபட்சமாக குஜராத் மாநிலத்துக்கு மட்டும் ரூ.120 கோடியே 65 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
பிற மாநிலங்களுக்கான அபராதத் தொகை:
ராஜஸ்தான்: ரூ.5.34 கோடி
மகாராஷ்டிரா: ரூ.2.02 கோடி
திரிபுரா: ரூ.1.22 கோடி
கர்நாடகா: ரூ.1.01 கோடி
அஸ்ஸாம்: ரூ.5.08 லட்சம்
தமிழ்நாடு: ரூ.3 லட்சம்
இதில், அபராதத் தொகையானது சம்பந்தப்பட்ட மாநிலங்களிடமிருந்து உடனடியாக வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக ரூ.12 கோடியே 95 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், குஜராத் மாநிலத்தில் மட்டும் ரூ.6.65 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
பல அதிகாரிகள் கைது
இந்த முறைகேடுகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன. 20 மாநிலங்களில் முறைகேடுகள் தொடர்பான 607 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 62 துறை அதிகாரிகள், 969 ஒப்பந்ததாரர்கள், 153 மூன்றாம் தரப்பு ஆய்வு நிறுவனங்கள், ஒரு முன்னாள் அமைச்சர், 10 அதிகாரிகள், 8 ஒப்பந்ததாரர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிநீர் இணைப்பு போன்ற அடிப்படைத் திட்டத்தில் இவ்வளவு பெரிய அளவில் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டிருப்பது, திட்டத்தின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது என்பதை காட்டுவதாக கூறப்படுகிறது.
-
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications